பதிவு செய்த நாள்
26 நவ2012
05:08
புதுடில்லி: நாட்டின் தொலைத்தொடர்பு சேவைத் துறை, கடந்த மூன்று ஆண்டுகளில், சராசரியாக, 31.07 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணைஅமைச்சர் மிலிந்த் தியோரா தெரிவித்தார்.நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலுமாக, நாட்டில் உள்ள ஒட்டு மொத்த தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை, 95.14 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2009ம் ஆண்டு, இதே மாதம் வரையில், 42.97 கோடி என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.
கடந்த 2010ம் ஆண்டில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சி, 44.57 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, சென்ற 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் முறையே, 36.22 சதவீதம் மற்றும் 12.40 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இதையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளில், இத்துறையின் சராசரி வளர்ச்சி, 31.07 சதவீதமாக உள்ளது.உள்நாட்டில், தொலைத் தொடர்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, தியோரா மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|