வேளாண் கடன் இலக்கு எட்ட வாய்ப்பில்லைவேளாண் கடன் இலக்கு எட்ட வாய்ப்பில்லை ... உர மானிய நிலுவையை வழங்க கூடுதல் தொகை தேவை உர மானிய நிலுவையை வழங்க கூடுதல் தொகை தேவை ...
ரொக்க மானியம் ரூ.1.05 லட்சம் கோடி தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2012
05:12

புதுடில்லி: மத்திய பெட்ரோலிய அமைச்சகம், நடப்பு நிதியாண்டிற்கு, 1,05,252 கோடி ரூபாய், ரொக்க மானியம் வழங்கும்படி, நிதியமைச்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை, அடக்க விலைக்கும் குறைவாக விற்பனை செய்கின்றன. இதனால், இந்நிறுவனங்களுக்கு, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 1.63 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மேற்கண்ட மொத்த தொகையில், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா, கெயில் ஆகிய நிறுவனங்கள், 60 ஆயிரம் கோடி ரூபாயை மானியமாக வழங்குகின்றன.இது போக, 1.05 லட்சம் கோடி ரூபாயை ரொக்க மானியமாக வழங்கும்படி, பெட்ரோலிய அமைச்சகம், நிதி அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக, மத்திய நிதி துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு, 85,526 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில், 30 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்க மானியம் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளதாக, பெட்ரோலிய துறையின் இணை அமைச்சர் பனபாக லட்சுமி தெரிவித்தார்.
மத்திய அரசு, கடந்த 2009-10ம் நிதியாண்டில், 26 ஆயிரம் கோடி ரூபாயை ரொக்க மானியமாக வழங்கியது. இது, 2010-11ம் நிதியாண்டில், 41 ஆயிரம் கோடி ரூபாயாகவும், 2011-12ம் நிதியாண்டில், 83,500 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது என, பனபாக லட்சுமி மேலும் தெரிவித்தார்.தற்போதைய நிலவரப்படி, எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில், 10.19 ரூபாயும், மண்ணெண்ணெய் விற்பனையில், 32.87 ரூபாயும், 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளை விற்பனையில், 478.50 ரூபாயும் இழப்பு ஏற்படுகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவற்றால், நடப்பாண்டில், மானியத்திற்கான தேவை மேலும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளதாக, நமோ நாராயண் மீனா மேலும் தெரிவித்தார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)