பதிவு செய்த நாள்
26 நவ2012
05:14
மும்பை:
நடப்பாண்டு, அக்டோபர் மாதத்தில், உள்நாட்டில், ஆயுள் காப்பீட்டு
வர்த்தகத்தில், ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் பிரிமியம் வருவாய், சென்ற
ஆண்டின், இதே மாதத்தை விட, 2.3 சதவீதம் உயர்ந்து, 6,851 கோடி ரூபாய் என்ற
அளவில் அதிகரித்துள்ளது என, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்
(ஐ.ஆர்.டி.ஏ.,) தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், பொதுத் துறையை
சேர்ந்த லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி.,) நிறுவனத்தின் பிரிமியம்
வருவாய், 4 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம், தனியார் துறை காப்பீட்டு
நிறுவனங்களின் பிரிமியம் வருவாய் குறைந்துஉள்ளது.
நடப்பு நிதியாண்டின்,
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், ஆயுள் காப்பீட்டு
நிறுவனங்களின் பிரிமியம் வருவாய், 53,814 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது,
சென்ற நிதியாண்டின், இதே காலத்தை (55,738 கோடி ரூபாய்) விட, 3.4 சதவீதம்
குறைவாகும்.மதிப்பீட்டு காலத்தில், தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்களின்,
பிரிமியம் வருவாய், 15 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம், பொதுத் துறையை
சேர்ந்த எல்.ஐ.சி., நிறுவனத்தின், பிரிமியம் வருவாய், 2 சதவீதம்
உயர்ந்துள்ளது.உள்நாட்டில், ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில், எல்.ஐ.சி.,
நிறுவனம், 69 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டு, முதலிடத்தில் உள்ளது. தனியார்
துறை நிறுவனங்களின், சந்தை பங்களிப்பு, 31 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|