பதிவு செய்த நாள்
28 நவ2012
11:36
புதுடில்லி: நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையிலான 10 மாதங்களில் உணவு பொருட்கள் விலை அதிகரித்துள்ளதாக மத்திய உணவு துறை அமைச்சர் கே.வி. தாமஸ் பாராளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை மற்றும் காய்கறிகளின் விலை இக்கால கட்டத்தில் கணிசமாக உயர்ந்துள்ளன. பால் பொருட்களின் விலை அதிக மாற்றங்களின்றி இருந்துள்ள நிலையில் பருப்பு, கடலை எண்ணெய் மற்றும் சர்க்கரை போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளன. 2012 ஜனவரி மாதத்தில் கிலோ ஒன்றிற்கு சராசரியாக ரூ20.51 ஆக இருந்த அரிசியின் விலை அக்டோபரில் ரூ.24.22 ஆகவும், இதே காலத்தில் கோதுமையின் விலை கிலோவிற்கு ரூ.16.22லிருந்து ரூ.19.21ஆகவும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். அதே போல் கோதுமை மாவு பொருட்களின் விலை கிலோவிற்கு ரூ.17.95 லிருந்து ரூ.21.03ஆக அதிகரித்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|