பதிவு செய்த நாள்
28 நவ2012
23:53
புதுடில்லி:வரும் 2021-22ம் நிதிஆண்டிற்குள், பெட்ரோலிய சுத்திகரிப்பு திறனை, 10 கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என, இந்திய ஆயில் நிறுவனத்தின் இயக்குனர் (சுத்திகரிப்பு) ஆர்.கே.கோஷ் தெரிவித்தார்.சுத்திகரிப்பு ஆலைகள்இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தற்சமயம், நிறுவனத்திற்கு, 7 சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. இவ்வாலைகளின் ஒட்டு மொத்த பெட்ரோலிய சுத்திகரிப்பு திறன், ஆண்டுக்கு, 5.42 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இதை, அடுத்த 10 ஆண்டுகளுக்குள், இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிடப் பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, 1.50 கோடி டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட, புதிய ஆலை, குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது.
நிறுவனத்திற்கு ஏற்கனவே, இம்மாநிலத்தில், கோயாலி என்ற இடத்தில், 1.37 கோடி டன் திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலையின் சுத்திகரிப்பு திறனை, தற்போதைய, 1.37 கோடி டன்னிலிருந்து, 1.80 கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், மதுரா ஆலையின் சுத்திகரிப்பு திறனையும், 80 லட்சம் டன்னிலிருந்து, 1.10 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது தவிர, பானிபட்டில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையின் திறனையும், தற்போதைய, 1.50 கோடி டன் என்ற அளவிலிருந்து, 1.80 கோடி டன் அல்லது 2.10 கோடி டன் என்ற அளவிற்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம்:ஒடிசா மாநிலம், பரதீப் என்ற இடத்தில், 1.50 கோடி டன் திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலை அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும். இதன், சுத்திகரிப்பு திறனும், 2 கோடி டன்னாக விரிவாக்கம் செய்யப்படும்.வரும் 13வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், மேற்கு கடற்கரையோர பகுதிகளில், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட உள்ளன.இவ்வாறு கோஷ் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|