முட்டை விலையில் பெரும் சரிவுமுட்டை விலையில் பெரும் சரிவு ... நாட்டின் சர்க்கரை உற்பத்தி2.30 கோடி டன்னாக குறையும் நாட்டின் சர்க்கரை உற்பத்தி2.30 கோடி டன்னாக குறையும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
இந்தியன் ஆயில்: சுத்திகரிப்பு திறனை 10 கோடி டன்னாக அதிகரிக்க இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2012
23:53

புதுடில்லி:வரும் 2021-22ம் நிதிஆண்டிற்குள், பெட்ரோலிய சுத்திகரிப்பு திறனை, 10 கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என, இந்திய ஆயில் நிறுவனத்தின் இயக்குனர் (சுத்திகரிப்பு) ஆர்.கே.கோஷ் தெரிவித்தார்.சுத்திகரிப்பு ஆலைகள்இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தற்சமயம், நிறுவனத்திற்கு, 7 சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. இவ்வாலைகளின் ஒட்டு மொத்த பெட்ரோலிய சுத்திகரிப்பு திறன், ஆண்டுக்கு, 5.42 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இதை, அடுத்த 10 ஆண்டுகளுக்குள், இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிடப் பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, 1.50 கோடி டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட, புதிய ஆலை, குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது.
நிறுவனத்திற்கு ஏற்கனவே, இம்மாநிலத்தில், கோயாலி என்ற இடத்தில், 1.37 கோடி டன் திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலையின் சுத்திகரிப்பு திறனை, தற்போதைய, 1.37 கோடி டன்னிலிருந்து, 1.80 கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், மதுரா ஆலையின் சுத்திகரிப்பு திறனையும், 80 லட்சம் டன்னிலிருந்து, 1.10 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது தவிர, பானிபட்டில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையின் திறனையும், தற்போதைய, 1.50 கோடி டன் என்ற அளவிலிருந்து, 1.80 கோடி டன் அல்லது 2.10 கோடி டன் என்ற அளவிற்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம்:ஒடிசா மாநிலம், பரதீப் என்ற இடத்தில், 1.50 கோடி டன் திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலை அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும். இதன், சுத்திகரிப்பு திறனும், 2 கோடி டன்னாக விரிவாக்கம் செய்யப்படும்.வரும் 13வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், மேற்கு கடற்கரையோர பகுதிகளில், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட உள்ளன.இவ்வாறு கோஷ் கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)