பதிவு செய்த நாள்
29 நவ2012
00:00
புதுடில்லி:மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும், பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி., நிறுவனத்தின் பங்கு விற்பனை மூலம், மத்திய அரசு, 12 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
பங்கு மூலதனம்:என்.டி.பி.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறு வனத்தில், கொண்டுள்ள, 84.50 சதவீத பங்கு மூலதனத்தில், 9.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு, திட்டமிட்டு உள்ளது. இதன் வாயிலாக, மத்திய அரசுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
இது, பொதுப் பங்கு வெளியீடு அல்லது கோரிக்கை அடிப்படையிலான பங்கு வெளியீடு (ஆபர் பார் சேல்) மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசு, பங்கு வெளியீட்டை நிர்வகிப்பதற்கான வங்கியை, நியமனம் செய்யும் வகையில், விண்ணப்பங்களை கோரியுள்ளது.கடந்த வாரம், மத்திய அரசின், முக்கிய அமைச் சரவை குழு கூட்டம் நடைபெற்றது. இதில், என்.டி.பி.சி., நிறுவனத்தில், மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், 9.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
பங்கு சந்தை :தற்போது, பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், மத்திய அரசு, கோரிக்கை அடிப்படையிலான பங்கு விற்பனை மூலம், என்.டி.பி.சி., நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, என்.டி.பி.சி., நிறுவனத்தில், மத்திய அரசு, 84.50 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. பங்கு விற்பனைக்கு பிறகு, இது, மூலதனம், 75 சதவீதமாக குறையும்.நடப்பு 2012ம் ஆண்டு, மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம், 8,245 கோடி ரூபாயாக உள்ளது. ஏற்கனவே, இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
தற்போது, இதன் பங்கின் விலை, 158.55 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இந்த விலை அடிப்படையில், பங்கு வெளியீடு மேற்கொள்ளப்பட்டால், அரசுக்கு, 12,400 கோடி ரூபாய் கிடைக்கும்.இந்துஸ்தான் காப்பர்மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள, மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
பங்கு சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், மத்திய அரசு, அண்மையில், இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் பங்குகளை, எல்.ஐ.சி., மற்றும் பொதுத் துறை வங்கிகளுக்கு, கோரிக்கை அடிப்படையிலான பங்கு வெளியீடு மூலம், விற்பனை செய்து, 800 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது.
நால்கோ நிறுவனம்:இந்நிறுவனத்தின், 5.58 சதவீத பங்குகளை, பங்கு ஒன்றை சராசரியாக, 156.56 ரூபாய் என்ற விலையில், விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசு, என்.எம்.டீ.சி., (10 சதவீத பங்குகள்), எம்.எம். டி.சி., (9.3 சதவீத பங்குகள்) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களின், பங்குகளை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலை யில், நால்கோ நிறுவனத்தின், 12.1 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|