பதிவு செய்த நாள்
29 நவ2012
15:41
இந்தியாவில், சிறிய கார் சந்தையில், மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய அறிமுகமான, "ஆல்டோ 800' கார், புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அறிமுகமாகி, ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், இந்த காருக்கு, இதுவரை, 40,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதில், 22,000 பேருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வு, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல காரணங்களால், கார் விற்பனையில் தொய்வு ஏற்பட்ட நிலையில், மாருதி சுசூகி நிறுவனம், கடந்த மாதம், ஆல்டோ 800 காரை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே, விற்பனையில் இருந்த ஆல்டோ எப்8டி காரை மாறுதல் செய்து தான், ஆல்டோ 800 கார் உருவாக்கப்பட்டுள்ளது. சிறிய கார் சந்தையில், ஹுண்டாய் நிறுவனத்தின் இயான் கார் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் தான், ஆல்டோ 800 காருக்கு போட்டி. இருப்பினும், இதுவரை, இந்த காருக்கு, 40,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள தொழிற்சாலையில் தான், ஆல்டோ 800 கார் உற்பத்தி செய்யப்படுகிறது. மாதத்துக்கு, 25,000 கார்கள் முதல், 30,000 கார்கள் வரை,உற்பத்தியாவதால், ஆல்டோ 800 காருக்கு, காத்திருப்பு காலம் பிரச்னை இல்லை. இதுவரை, 22,000 பேர் ஆல்டோ 800 கார் டெலிவரி பெற்றுள்ளனர். ஆல்டோ 800 காரில், 796 சிசி திறன் கொண்ட, 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப் பட்டுள்ளது. பழைய ஆல்டோ கார் மற்றும் மாருதி 800 கார்களில் பயன்படுத்தப்பட்ட இன்ஜினை, மேம்படுத்தி, ஆல்டோ 800 காரில் பொருத்தியுள்ளனர். இந்த கார், ஒரு லிட்டருக்கு, 22.7 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த காரில், 5 ஸ்பீடு மேனுவல், கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. சி.என்.ஜி., வசதியுடனும், ஆல்டோ 800 கார் கிடைக்கிறது. வருங்காலத்தில், ஆல்டோ கே10 காரில் பொருத்தப் பட்டுள்ள, 1 லிட்டர் கே-சீரிஸ் இன்ஜின், ஆல்டோ 800 காரில் பொருத்தப்படலாம் என்ற தகவல் வெளியா கியுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|