நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.8,030 கோடி உயர்வுநாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.8,030 கோடி உயர்வு ... முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதம் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதம் ...
வர்த்தகம் » ஜவுளி
ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.4,988 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2012
00:22

புதுடில்லி:சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 90.70 கோடி டாலர் (4,988 கோடி ரூபாய்) என்ற அளவில் குறைந்துள்ளது.இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், 91.40 கோடி டாலர் (5,027 கோடி ரூபாய்) என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு, 65 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார சுணக்க நிலையால், மேற்கண்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இதனால், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு, அந்நாடுகளிலிருந்து, ஆர்டர்கள் குறைந்துள்ளன.
மேலும், மேற்கண்ட நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதியில், இந்தியாவின் அண்டை நாடுகளான, வியட்நாம் மற்றும் வங்கதேசம் ஆகியவை, இந்தியாவிற்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகின்றன. மூலப் பொருட்கள் விலை உயர்வு, கூலி அதிகரிப்பு போன்ற காரணங்களால், ஏற்றுமதியாளர்களின் லாபமும் குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 710 கோடி டாலராக (39,050 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 9.1 சதவீதம் குறைவாகும்.
பாரம்பரிய சந்தைகளில், ஆயத்த ஆடை ஏற்றுமதி குறைந்ததை அடுத்து, இந்திய ஏற்றுமதியாளர்கள், புதிய சந்தைகளான, லத்தீன் அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல், ரஷ்யா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுஉள்ளனர்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)