பதிவு செய்த நாள்
02 டிச2012
00:22
புதுடில்லி:சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 90.70 கோடி டாலர் (4,988 கோடி ரூபாய்) என்ற அளவில் குறைந்துள்ளது.இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், 91.40 கோடி டாலர் (5,027 கோடி ரூபாய்) என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு, 65 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார சுணக்க நிலையால், மேற்கண்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இதனால், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு, அந்நாடுகளிலிருந்து, ஆர்டர்கள் குறைந்துள்ளன.
மேலும், மேற்கண்ட நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதியில், இந்தியாவின் அண்டை நாடுகளான, வியட்நாம் மற்றும் வங்கதேசம் ஆகியவை, இந்தியாவிற்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகின்றன. மூலப் பொருட்கள் விலை உயர்வு, கூலி அதிகரிப்பு போன்ற காரணங்களால், ஏற்றுமதியாளர்களின் லாபமும் குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 710 கோடி டாலராக (39,050 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 9.1 சதவீதம் குறைவாகும்.
பாரம்பரிய சந்தைகளில், ஆயத்த ஆடை ஏற்றுமதி குறைந்ததை அடுத்து, இந்திய ஏற்றுமதியாளர்கள், புதிய சந்தைகளான, லத்தீன் அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல், ரஷ்யா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுஉள்ளனர்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|