பதிவு செய்த நாள்
02 டிச2012
00:24

புதுடில்லி:சென்ற அக்டோபர் மாதத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, 6.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 0.4 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்து காணப்பட்டது. மேலும், இது, செப்டம்பர் மாதத்தில், 5 சதவீதம் என்ற அளவில் இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், முக்கிய எட்டு துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து, மீண்டு வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
சிமென்ட்: நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், மின்சாரம், உருக்கு, உரம் மற்றும் சிமென்ட் ஆகியவை முக்கிய எட்டு துறைகளின் கீழ் இடம்பெறுகின்றன.நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடுவதில், மேற்கண்ட துறைகளின் பங்களிப்பு, 38 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற அக்டோபர் மாதத்தில், சுத்திகரிப்பு மற்றும் உருக்கு துறைகளின் உற்பத்தி வளர்ச்சிமுறையே, 20.3 சதவீதம் மற்றும் 5.9 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில் முறையே, 10.3 சதவீதம் மற்றும் 2 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில், சிமென்ட் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 6.8 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, செப்டம்பரில், 13.8 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. மேலும், நிலக்கரி துறையின் உற்பத்தி வளர்ச்சியும், 21.4 சதவீதத்திலிருந்து, 10.9 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது.இது தவிர, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே 0.4 சதவீதம் மற்றும் 14.9 சதவீதம் என்ற அளவில் தொடர்ந்து பின்னடைவைக் கண்டுள்ளன.
மின்சாரம்:இருப்பினும், மதிப்பீட்டு மாதத்தில், மின்சார துறையின் உற்பத்தி வளர்ச்சி 5.2 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, செப்டம்பரில், 3.9 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், முக்கிய எட்டு துறைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி, 3.7 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 4.3 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|