பதிவு செய்த நாள்
03 டிச2012
00:17
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடு மூலம், 932 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.நடப்பு, 2012 - 13ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசின் குறிப்பிட்ட சதவீத பங்கு விற்பனை மூலம், 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, என்.பீ.சி.சி., நிறுவனத்தின், 10 சதவீத பங்கு விற்பனை மூலம், 124.97 கோடி ரூபாயும், இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின், 5.58 சதவீத பங்கு விற்பனை வாயிலாக, 807.02 கோடி ரூபாயும் திரட்டப்பட்டுள்ளன.ஆக இதுவரை, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடு மூலம், மொத்தம், 931.99 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை, 5.1 சதவீதம் அல்லது, 5.13 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|