பதிவு செய்த நாள்
03 டிச2012
00:18
மும்பை:கடந்த 2011-12ம் நிதியாண்டில், நிறுவனங்களின் கோரப்படாத மற்றும் வழங்கப்படாத 20.90 கோடி ரூபாய் டிவிடெண்ட் தொகை, அரசின் நிதியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என, மத்திய நிறுவன விவகார துறையின் இணை அமைச்சர் சச்சின் பைலட் பார்லிமென்டில் தெரிவித்தார்.இத்தொகை, கடந்த 2009-10ம் நிதியாண்டில், 10.79 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, கணக்கீட்டு காலத்தில், இத்தொகை 100 சதவீதம் உயர்ந்துள்ளது.நிறுவனங்கள், அவை ஈட்டும் நிகர லாபத்தில், குறிப்பிட்ட சதவீதத்தை, பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக வழங்குகின்றன.
டிவிடெண்ட் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட, 30 தினங்களுக்குள் அத்தொகையை பங்குதாரர்களுக்கு அனுப்ப வேண்டும்.சரியான முகவரி இல்லாமை, விற்ற பிறகு பங்குகளை மாற்றிக் கொள்ளாதது போன்ற வகையில், நிறுவனங்களின் டிவிடெண்ட், உரிமைக் கோரப்படாமல் இருக்கும்.
ஏழு ஆண்டுகளுக்கு பிறகும், உரிய நபர்களிடமிருந்து, உரிமை கோரப்படாத நிலையில், நிறுவனங்கள், அத்தொகையை அரசால் அமைக்கப்பட்ட, முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்திற்கு மாற்ற வேண்டும்.இவ்வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில், கோரப்படாத மற்றும் வழங்கப்படாத டிவிடெண்ட் தொகை, 2 மடங்கு அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|