பதிவு செய்த நாள்
03 டிச2012
00:19
சென்னை:எண்ணூர் துறைமுகம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3 லட்சம் கார்களை கையாளும் திறன் கொண்டதாக உருவாகும் என, எண்ணூர் போர்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.வேலுமணி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:எண்ணூர் துறைமுகம், சென்ற ஆண்டில், 1.04 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்தது. இந்த எண்ணிக்கை, நடப்பு ஆண்டில், 1.80 லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் திறனை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து, அடுத்த இரண்டு ஆண்டுகளில், துறைமுகம், அதன் முழு திறனை, அதாவது, 3 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்யக்கூடிய சிறப்பை பெறும்.இவ்வாறு வேலுமணி தெரிவித்தார்.
சென்னை துறைமுகம், இடநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறது. இதனால், சென்னையில் இருந்து, 25 கி.மீ., தூரம் உள்ள எண்ணூர் துறைமுகம் வாகன ஏற்றுமதி மையமாக உருவெடுத்துள்ளது.பல நிறுவனங்கள் எண்ணூர் துறைமுகம் வாயிலாக வாகனங்களை ஏற்றுமதி செய்து வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம், அதன் கார்களை, சென்னை துறைமுகம் வழியாகவே ஏற்றுமதி செய்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|