எண்ணூர் துறைமுகம்மூன்று லட்சம் கார்களை கையாளும்எண்ணூர் துறைமுகம்மூன்று லட்சம் கார்களை கையாளும் ... நாட்டின் நெல் கொள்முதல் 1.16 கோடி டன்னாக அதிகரிப்பு நாட்டின் நெல் கொள்முதல் 1.16 கோடி டன்னாக அதிகரிப்பு ...
அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்தை விஞ்சியது இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2012
00:21

புதுடில்லி:இந்தியா, 30 ஆண்டுகளுக்கு பிறகு, அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்தை விஞ்சி முதலிடத்தை பிடித்துள்ளது.நடப்பாண்டில், இந்தியா, 97.50 லட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்துஉள்ளது. தாய்லாந்து, 65 லட்சம் டன் அரிசியை மட்டுமே ஏற்றுமதி செய்து, மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சென்ற 2011ம் ஆண்டு, தாய்லாந்து, 1.07 கோடி டன் அரிசியை ஏற்றுமதி செய்திருந்தது. இந்தியா, கடந்த ஆண்டு செப்டம்பரில் தான் அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்தது. இதனால், சென்ற ஆண்டு, இந்தியாவின் அரிசி ஏற்றுமதி, 48 லட்சம் டன் என்று அளவிற்கே இருந்தது. இந்தியாவை விட, தாய்லாந்து அரிசியின் விலை அதிகமாக இருப்பதால், சர்வதேச சந்தையில் அதற்கு வரவேற்பு குறைந்துள்ளது.
தாய்லாந்து அரிசி விலை, ஒரு டன், 530-540 டாலராக உள்ளது. அதே சமயம் இந்திய அரிசி விலை, ஒரு டன், 375-385 டாலர் என்ற அளவில் உள்ளது.தாய்லாந்து ஆளும் கட்சி, தேர்தல் வாக்குறுதியை காப்பாற்றும் நோக்கில், நெல் கொள்முதல் விலையை, டன்னுக்கு, 15 ஆயிரம் பாத் ஆக உயர்த்தியுள்ளது.
இதனால், தாய்லாந்தில் இருந்து ஏற்றுமதியாகும் அரிசியின் விலை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் போட்டியிட முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது.எனினும், தாய்லாந்தின் நெல் கையிருப்பு அதிகரித்து வருவதால், இந்நாடு, வரும் 2013ம் ஆண்டு, 85 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி மேற்கொண்டு, இந்தியாவை விஞ்சும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி, 72.50 லட்சம் டன் என்ற அளவிற்கே இருக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பாண்டு, அரிசி ஏற்றுமதியில் பின் தங்கிய போதிலும், சர்க்கரை ஏற்றுமதியில், தாய்லாந்து, இந்தியாவை விஞ்சி, தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என, தெரிகிறது.நடப்பாண்டில், தாய்லாந்து, 77 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி மேற்கொள்ளும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், நடப்பாண்டு ஜூலையில் சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால், நடப்பாண்டில், இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி, 36.70 லட்சம் டன் என்ற அளவிற்கே இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)