பதிவு செய்த நாள்
03 டிச2012
00:22
மும்பை:சென்ற அக்டோபரில், நிறுவனங்களுக்கு, வங்கிகள், 20,263,68 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன. இது, 15.2 சதவீத வளர்ச்சியாகும்.சென்ற ஆண்டு இதே மாதத்தில் இவ்வளர்ச்சி, 23.1 சதவீதமாக உயர்ந்திருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால கடன்:நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், நிறுவனங்கள் அதிக அளவில் வங்கிகளிடம் இருந்து, நடைமுறை செலவினங்களுக்காக குறுகிய கால கடன்களை பெற்றுள்ளன.
சென்ற அக்டோபரில், பெரிய நிறுவனங்களின் கடன் வளர்ச்சி, 18.9 சதவீதமாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 23.7 சதவீதமாக இருந்தது.சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், வசூலாகாத கடன் அதிகரித்துள்ளதால், இவற்றுக்கு வங்கிகள் தாராளமாக கடன் வழங்குவது குறைந்துள்ளது.
சென்ற அக்டோபரில், நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன், 1 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 30.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
அது போன்று, சிறிய நிறுவனங்களுக்கான கடன் வளர்ச்சி, இதே காலத்தில், 14.5 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.வங்கிகள் அவற்றின் கடன் வளர்ச்சிக்கு, சில்லரை கடன் பிரிவையே அதிகம் சார்ந்துஉள்ளன. இதன்படி, சென்ற அக்டோபரில், வங்கிகளின் சில்லரை கடன் வளர்ச்சி, 14.1 சதவீதம் உயர்ந்து, 8,337 கோடி ரூபாயாக உள்ளது.இது, சென்ற ஆண்டு, 14.3 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
வீட்டு வசதி கடன்:சில்லரை கடன்களில், இதே காலத்தில், வீட்டு வசதி கடன் பிரிவின் வளர்ச்சி, 16.5 சதவீதத்தில் இருந்து, 12.1 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.வீட்டு வசதிக் கடனுக்கான வட்டி விகிதத்தை, எஸ்.பீ.ஐ. உள்ளிட்ட பல வங்கிகள் குறைத்துள்ள நிலையிலும், இப்பிரிவின் கடன் வளர்ச்சி குறைந்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில் வாகன கடன், 18 சதவீதத்தில் இருந்து, 22.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நீண்ட கால அடிப்படையில், புதிய திட்டங்களுக்காக கடன் பெறுவது குறைந்துஉள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|