அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்தை விஞ்சியது இந்தியா அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்தை விஞ்சியது இந்தியா ... நாட்டின் நெல் கொள்முதல் 1.16 கோடி டன்னாக அதிகரிப்பு நாட்டின் நெல் கொள்முதல் 1.16 கோடி டன்னாக அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன் வளர்ச்சியில் மந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2012
00:22

மும்பை:சென்ற அக்டோபரில், நிறுவனங்களுக்கு, வங்கிகள், 20,263,68 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன. இது, 15.2 சதவீத வளர்ச்சியாகும்.சென்ற ஆண்டு இதே மாதத்தில் இவ்வளர்ச்சி, 23.1 சதவீதமாக உயர்ந்திருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால கடன்:நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், நிறுவனங்கள் அதிக அளவில் வங்கிகளிடம் இருந்து, நடைமுறை செலவினங்களுக்காக குறுகிய கால கடன்களை பெற்றுள்ளன.
சென்ற அக்டோபரில், பெரிய நிறுவனங்களின் கடன் வளர்ச்சி, 18.9 சதவீதமாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 23.7 சதவீதமாக இருந்தது.சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், வசூலாகாத கடன் அதிகரித்துள்ளதால், இவற்றுக்கு வங்கிகள் தாராளமாக கடன் வழங்குவது குறைந்துள்ளது.
சென்ற அக்டோபரில், நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கடன், 1 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 30.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
அது போன்று, சிறிய நிறுவனங்களுக்கான கடன் வளர்ச்சி, இதே காலத்தில், 14.5 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.வங்கிகள் அவற்றின் கடன் வளர்ச்சிக்கு, சில்லரை கடன் பிரிவையே அதிகம் சார்ந்துஉள்ளன. இதன்படி, சென்ற அக்டோபரில், வங்கிகளின் சில்லரை கடன் வளர்ச்சி, 14.1 சதவீதம் உயர்ந்து, 8,337 கோடி ரூபாயாக உள்ளது.இது, சென்ற ஆண்டு, 14.3 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
வீட்டு வசதி கடன்:சில்லரை கடன்களில், இதே காலத்தில், வீட்டு வசதி கடன் பிரிவின் வளர்ச்சி, 16.5 சதவீதத்தில் இருந்து, 12.1 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.வீட்டு வசதிக் கடனுக்கான வட்டி விகிதத்தை, எஸ்.பீ.ஐ. உள்ளிட்ட பல வங்கிகள் குறைத்துள்ள நிலையிலும், இப்பிரிவின் கடன் வளர்ச்சி குறைந்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில் வாகன கடன், 18 சதவீதத்தில் இருந்து, 22.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நீண்ட கால அடிப்படையில், புதிய திட்டங்களுக்காக கடன் பெறுவது குறைந்துஉள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)