பதிவு செய்த நாள்
03 டிச2012
00:24
கொச்சி:உள்நாட்டில், இஞ்சி உற்பத்தி, 30-40 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், இதன் விலை கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது.சர்வதேச அளவில், இஞ்சி உற்பத்தி, ஆண்டுக்கு, 8.35 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. இதில், இந்தியாவின் பங்களிப்பு, 2.75 லட்சம் டன்னாகும்.
இஞ்சி விலை உயர்ந்து, அதிக வருவாய் கிடைப்பதால், கேரள மாநில விவசாயிகள், கர்நாடகாவின், கூர்க், ஹாசன் மாவட்டங்களில் நிலங்களை, குத்தகைக்கு எடுத்து, இஞ்சி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இப்பகுதிகளில், நிலங்களுக்கான குத்தகை தொகை உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு, கர்நாடகாவின், இஞ்சி வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால், ஒரு கிலோ இஞ்சி, ஏழு ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, இஞ்சி உற்பத்தி, 30 முதல் 40 சதவீதம் சதவீதம் குறைந்துள்ளது.
இதனால், கேரளாவின் வயநாட்டு சந்தையில், ஒரு கிலோ இஞ்சி, 39-40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், ஒரு கிலோ இஞ்சி, 55-60 ரூபாய்க்கு விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, உள்நாட்டில், இஞ்சி விலை குறைவாக இருந்தால், அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதுடன், இதன் இறக்குமதியும் குறையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|