பதிவு செய்த நாள்
03 டிச2012
00:26
மும்பை:அலைபேசி எண்ணை மாற்றாமல், ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்தின் சேவையை, பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அலைபேசி சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம், "மொபைல் நம்பர் போர்டபிலிட்டி (எம்.என்.பி.,)' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. விண்ணப்பம்:கடந்த ஆண்டு ஜனவரி முதல், நடப்பாண்டு, செப்டம்பர் வரையிலுமாக, இத்திட்டத்தின் கீழ், 6.86 கோடி பேர், தமது அலைபேசி சேவை நிறுவனத்தில் இருந்து வெளியேற விண்ணப்பித்துள்ளனர்.
இதே காலத்தில், இத்திட்டத்தின் கீழ் மாற்று சேவை வேண்டி, 6.95 கோடி பேரின் விண்ணப்பங்களை அலைபேசி நிறுவனங்கள் பெற்றுள்ளன.ஆக, புதிய நிறுவனத்தின் அலைபேசி சேவையை விட்டு வெளியேற விண்ணப்பித்தோரை விட, புதிய அலைபேசி சேவையை பெற விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இந்த வகையில், இந்த இரு பிரிவிலான நிகர விண்ணப்பங்களின் எண்ணிக்கை 9,22,487 ஆக உள்ளது.
"எம்.என்.பி.,' திட்டம் அறிமுகம் செய்ததது முதல், சென்ற செம்படம்பர் வரையிலுமாக, அலைபேசி எண்ணை மாற்றாமல், மாற்று நிறுவனங்களின் சேவைக்கு வந்த விண்ணப்பமும், சேவையை பெற்றோரின் எண்ணிக்கையும், கிட்டத்தட்ட சம அளவில், அதாவது, 5.58 கோடியாக உள்ளது.
வோடபோன் இந்தியா:சென்ற செப்டம்பர் வரையிலுமாக, வோடபோன் இந்தியா நிறுவனத்தில் இருந்து, வெளியேற விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1.38 கோடியாக உள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தின் சேவை வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, 1.89 கோடி என்ற அளவில் உள்ளது. இதன் மூலம், வோட போன் நிறுவனத்திற்கு, 51 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க உள்ளனர்.மதிப்பீட்டு காலத்தில், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் சேவை வேண்டி, விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1.47 கோடியாக உள்ளது.
அதேசமயம், இந்நிறுவனத்தில் இருந்து, வெளியேற விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, 1.01 கோடி என்ற அளவில் உள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்திற்கு, 46 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின், சேவை வேண்டி விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1.97 கோடி என்ற அளவில் உள்ளது. அதேசமயம், வெளியேற விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1.52 கோடியாக உள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்திற்கு, 45 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துஉள்ளனர்.
இழப்பு:ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப சேவை வேண்டி, விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 23 லட்சமாக உள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தில் இருந்து வெளியேற விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, 51 லட்சமாக உள்ளது. இதன் மூலம், இந்நிறுவனம், 28 லட்சம் வாடிக்கையாளர்களை இழக்க உள்ளது.
டாட்டா டெலி சர்வீசஸ்:டாட்டா டெலி சர்வீசஸ் நிறுவனத்தின், சி.டீ.எம்.ஏ., தொழில்நுட்பத்தில் இருந்து, வெளியேற விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, 17.50 லட்சமாக உள்ளது. இருப்பினும், இந்நிறுவனத்தின், சேவை வேண்டி, விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1.50 லட்சமாக உள்ளது. இதன் காரணமாக, இந்நிறுவனம், 16 லட்சம் வாடிக்கையாளர்களை இழக்க உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின், சேவை வேண்டி, விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 35 லட்சமாக உள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தில் இருந்து வெளியேற விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 42 லட்சமாக உள்ளது. இதன் மூலம், இந்நிறுவனம், 7 லட்சம் வாடிக்கையாளர்களை இழக்க உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|