இஞ்சி உற்பத்தி 30 சதவீதம் குறைவுஇஞ்சி உற்பத்தி 30 சதவீதம் குறைவு ... உச்சத்தில் திண்டுக்கல் மல்லி உச்சத்தில் திண்டுக்கல் மல்லி ...
அலைபேசி சேவை நிறுவனங்களை மாற்ற ஆர்வம்:எம்.என்.பி., திட்டத்தின் கீழ்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2012
00:26

மும்பை:அலைபேசி எண்ணை மாற்றாமல், ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்தின் சேவையை, பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அலைபேசி சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம், "மொபைல் நம்பர் போர்டபிலிட்டி (எம்.என்.பி.,)' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. விண்ணப்பம்:கடந்த ஆண்டு ஜனவரி முதல், நடப்பாண்டு, செப்டம்பர் வரையிலுமாக, இத்திட்டத்தின் கீழ், 6.86 கோடி பேர், தமது அலைபேசி சேவை நிறுவனத்தில் இருந்து வெளியேற விண்ணப்பித்துள்ளனர்.
இதே காலத்தில், இத்திட்டத்தின் கீழ் மாற்று சேவை வேண்டி, 6.95 கோடி பேரின் விண்ணப்பங்களை அலைபேசி நிறுவனங்கள் பெற்றுள்ளன.ஆக, புதிய நிறுவனத்தின் அலைபேசி சேவையை விட்டு வெளியேற விண்ணப்பித்தோரை விட, புதிய அலைபேசி சேவையை பெற விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இந்த வகையில், இந்த இரு பிரிவிலான நிகர விண்ணப்பங்களின் எண்ணிக்கை 9,22,487 ஆக உள்ளது.
"எம்.என்.பி.,' திட்டம் அறிமுகம் செய்ததது முதல், சென்ற செம்படம்பர் வரையிலுமாக, அலைபேசி எண்ணை மாற்றாமல், மாற்று நிறுவனங்களின் சேவைக்கு வந்த விண்ணப்பமும், சேவையை பெற்றோரின் எண்ணிக்கையும், கிட்டத்தட்ட சம அளவில், அதாவது, 5.58 கோடியாக உள்ளது.
வோடபோன் இந்தியா:சென்ற செப்டம்பர் வரையிலுமாக, வோடபோன் இந்தியா நிறுவனத்தில் இருந்து, வெளியேற விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1.38 கோடியாக உள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தின் சேவை வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, 1.89 கோடி என்ற அளவில் உள்ளது. இதன் மூலம், வோட போன் நிறுவனத்திற்கு, 51 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க உள்ளனர்.மதிப்பீட்டு காலத்தில், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் சேவை வேண்டி, விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1.47 கோடியாக உள்ளது.
அதேசமயம், இந்நிறுவனத்தில் இருந்து, வெளியேற விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, 1.01 கோடி என்ற அளவில் உள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்திற்கு, 46 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின், சேவை வேண்டி விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1.97 கோடி என்ற அளவில் உள்ளது. அதேசமயம், வெளியேற விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1.52 கோடியாக உள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்திற்கு, 45 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துஉள்ளனர்.
இழப்பு:ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப சேவை வேண்டி, விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 23 லட்சமாக உள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தில் இருந்து வெளியேற விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, 51 லட்சமாக உள்ளது. இதன் மூலம், இந்நிறுவனம், 28 லட்சம் வாடிக்கையாளர்களை இழக்க உள்ளது.
டாட்டா டெலி சர்வீசஸ்:டாட்டா டெலி சர்வீசஸ் நிறுவனத்தின், சி.டீ.எம்.ஏ., தொழில்நுட்பத்தில் இருந்து, வெளியேற விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, 17.50 லட்சமாக உள்ளது. இருப்பினும், இந்நிறுவனத்தின், சேவை வேண்டி, விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1.50 லட்சமாக உள்ளது. இதன் காரணமாக, இந்நிறுவனம், 16 லட்சம் வாடிக்கையாளர்களை இழக்க உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின், சேவை வேண்டி, விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 35 லட்சமாக உள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தில் இருந்து வெளியேற விண்ணப்பித்துள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை, 42 லட்சமாக உள்ளது. இதன் மூலம், இந்நிறுவனம், 7 லட்சம் வாடிக்கையாளர்களை இழக்க உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)