பதிவு செய்த நாள்
03 டிச2012
12:45
புதுடில்லி :"நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வரும் மாதங்களில் சற்றே பாதிப்படையும்' என, இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க, மத்திய அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்தும் பலன் கிட்டவில்லை. கடந்த, ஜூலை மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில், பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாக இருந்தது என, இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தயாரிப்பு துறை மற்றும் விவசாயத் துறையில் செயல்பாடு மோசமாக இருந்ததால், பொருளாதார வளர்ச்சி சற்றே குறைந்துள்ளது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய கொள்கைகள் சரிவு சற்றே தடுக்கப் பட்டுள்ளது.இந்தாண்டு, ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5 சதவீதத்திலிருந்து, 5.5 சதவீதத்திற்குள் தான் இருக்கும் என தெரிகிறது.இந்த ஆய்வில் பங்கேற்ற, பல நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் கூறுகையில், "வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகமாக இருப்பதாலும், ஐரோப்பிய பொருளாதார மந்த நிலையாலும், தொடர்ந்து வரும் வாரங்களில் வளர்ச்சி பாதிக்கப்படும்' என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|