பதிவு செய்த நாள்
04 டிச2012
00:11
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 5.4 சதவீதமாக அதிகரிக்கும் என, சர்வதேச நிதி நிறுவனமான, மார்கன் ஸ்டான்லி மறுமதிப்பீடு செய்துள்ளது.
வேளாண் துறை:இது, முன், 5.1 சதவீதம் என்ற அளவில் இருக்குமென, மதிப்பிடப்பட்டிருந்தது.நடப்பு நிதியாண்டின், செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், வேளாண் சாராத துறைகளின் உற்பத்தி சிறப்பான அளவில் இருக்குமென, எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்வு:மேலும், வேளாண் துறை உற்பத்தியும் மிதமான அளவில் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.இத்தகைய காரணங்களால், இந்தியாவில், பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை மார்கன் ஸ்டான்லி நிறுவனம் உயர்த்தி அறிவித்துள்ளது.முந்தைய மதிப்பீடுஇருப்பினும், வரும் 2013-14ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, முந்தைய மதிப்பீடான, 6.2 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் என, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|