பதிவு செய்த நாள்
04 டிச2012
00:14
புதுடில்லி:வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும், "பாத்தலிக் ஆன்ஹைரைடு' என்ற ரசாயனத்தின் மீது, பொருள் குவிப்பு வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும், "பாத்தலிக் ஆன்ஹைரைடு' என்ற ரசாயனப் பொருள், கொரியா, இஸ்ரேல், தைவான் ஆகிய நாடுகளிலிருந்து அதிக அளவில் இறக்குமதி ஆகிறது.இதன் காரணமாக, இந்த ரசாயன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, இறக்குமதியாகும், இவ்வகை ரசாயன பொருள் மீது, டன் ஒன்றுக்கு, 91.12 டாலர் முதல், 150.88 டாலர் வரையில் பொருள் குவிப்பு வரி விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2007-08ம் ஆண்டில், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு டன் "பாத்தலிக் ஆன்ஹைரைடு' ரசாயனத்தின் விலை, 22,536 ரூபாயாக இருந்தது. இது, 2010ம் ஆண்டு, 40,605 ரூபாயாக மிகவும் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும், துணிகள், நூலிழை, நைலான், டயர் வடம் மற்றும் பல்வேறு ரசாயனங்கள் மீது, பொருள் குவிப்பு வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|