மூன்று கோடி முதலீட்டாளர்களுக்கு எப்போது பணம்?சகாராவுக்கு சுப்ரீம் கோர்ட் 24 மணி நேர கெடுமூன்று கோடி முதலீட்டாளர்களுக்கு எப்போது பணம்?சகாராவுக்கு சுப்ரீம் ... ... வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும்: அசோசெம் வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும்: அசோசெம் ...
நெடுஞ்சாலை திட்டங்களில் தமிழகம் இரண்டாவது இடம்:அரசு, தனியார் துறை பங்களிப்புடன்...- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2012
00:19

இந்தியாவில், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து (பி.பி.பி.,), செயல்படுத்தி வரும் நெடுஞ்சாலை திட்டங்களில், தமிழகம், 20 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.அது போன்று, இதே கூட்டுடன் தற்போது நடைபெற்று வரும் நெடுஞ்சாலை கட்டுமான பணிகளில், 7 சதவீத பங்களிப்புடன், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாக, அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மின்சாரம்:இந்தியாவில், விமான நிலையங்கள், நெடுஞ்சாலை, மின்சாரம், துறைமுகம், நகர்ப்புற மேம்பாட்டு பணிகள் போன்ற அதிக முதலீடுகளை கொண்டுள்ள அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை, மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.நடப்பாண்டு ஆகஸ்ட் வரையிலுமாக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்கேற்புடன், நாடு தழுவிய அளவில், 21,600 ரூபாய் மதிப்பிலான, 115 சாலை அமைக்கும் திட்டங்கள் முடிவுற்றுள்ளன.
இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில், 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான, 21 திட்டங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதையடுத்து, அரசு - தனியார் பங்கேற்புடன் நிறைவேற்றப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்துள்ள, நெடுஞ்சாலை பணிகளில், மகாராஷ்டிரா, 22 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.இதையடுத்து, 20 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ள, தமிழகத்தில், 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான, 11 நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
ராஜஸ்தான்: மூன்றாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில், 3,400 கோடி ரூபாய் மதிப்பிலான, 28 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.மத்திய பிரதேசத்தில், 1,800 கோடி ரூபாய் மதிப்பிலான, 14 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இம்மாநிலம் நான்காவது இடத்தில் உள்ளது. ஐந்தாவது இடத்தில் உள்ள ஆந்திராவில், 1,700 கோடி ரூபாய் மதிப்பிலான, ஏழு நெடுஞ்சாலை திட்டங்கள் முடிவடைந்து, செயல்பாட்டில் உள்ளன.
உத்தரபிரதேசம்:"பி.பி.பி.,' திட்டத்தின் கீழ், இந்தியாவில், தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் தான் அதிக அளவில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.தேசிய அளவிலான இவ்வகை பணிகளில், உத்தரபிரதேசம் 33 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
இம்மாநிலத்தில், 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 15 சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதையடுத்து, இரண்டாவது இடத்தில் உள்ள குஜராத்தில், 13,600 கோடி ரூபாய் மதிப்பில், 22 நெடுஞ்சாலை திட்டங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.மகாராஷ்டிரா:மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்தில், 12,700 கோடி ரூபாய் மதிப்பிலான, 21 சாலை அமைக்கும் திட்டங்களில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலுமாக, இந்தியாவில், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் கூட்டுடன் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 881 திட்டங்கள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.நகர்ப்புற மேம்பாடு:இதில், தற்போது, 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 230 திட்டங்கள் முடிவுற்று செயல்பட்டு வருகின்றன. 3.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 432 திட்டங்களில், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், 78 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 172 திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.உள்நாட்டில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டாக செயல்பட்டு வரும் துறைகளில், நெடுஞ்சாலை துறை, 52 சதவீத பங்களிப்புடன், முதலிடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து, நகர்ப்புற மேம்பாடு, மின்சாரம் ஆகிய துறைகள், தலா 20 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)