பதிவு செய்த நாள்
04 டிச2012
00:20
புதுடில்லி: வரும் பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பை, 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், உற்பத்தி மற்றும் சேவை வரிகளை, குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், 8 சதவீதமாக இருந்த, உற்பத்தி மற்றும் சேவை வரி, தற்போது, 12 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது.மேற்கண்ட வரி விகிதங்கள் குறைக்கப்பட்டால், அது, தொழில் துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதாக அமையும். மேலும், பணவீக்க குறைந்து, முதலீடுகள் மேற்கொள்வதும் அதிகரிக்கும்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரி (எம்.ஏ.டி) விதிப்பு திரும்ப பெற வேண்டும். இது தவிர, நிறுவன வரியையும், 30 சதவீதத்திலிருந்து, 25 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்.அதேசமயம், இறக்குமதியாகும், முழுமையான பொருட்களுக்கு, சுங்க வரி அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான், சீனா போன்ற நாடுகளின் முறையற்ற போட்டிகளிலிருந்து, உள்நாட்டு நிறுவனங்களை பாதுகாக்க முடியும் என, அசோசெம் தலைவர் ஆர்.என்.தூத் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|