பதிவு செய்த நாள்
04 டிச2012
00:22
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கட்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு, முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்ததை அடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.
கிரீஸ் நாடு, 1,300 கோடி டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை திரும்ப பெறுவதாக வெளியிட்ட அறிவிப்பு, சீனாவில், தயாரிப்பு துறை உற்பத்தி அதிகரித்துள்ளது போன்றவற்றால், ஐரோப்பிய நாடுகளில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. இருப்பினும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம், ஏற்ற, இறக்கத்துடனே இருந்தது.
நேற்றைய வர்த்தகத்தில், வங்கி, நுகர்பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், ரியல் எஸ்டேட், மின்சாரம், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 34.58 புள்ளிகள் சரிவடைந்து, 19,305.32 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச்சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,416.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,257.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், எச்.டீ.எப்.சி., பேங்க், பார்தி ஏர்டெல், கெயில் உள்ளிட்ட 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டாட்டா ஸ்டீல், ரிலையன்ஸ் உள்ளிட்ட 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 8.90 புள்ளிகள் குறைந்து, 5,870.95 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,899.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,854.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|