பதிவு செய்த நாள்
04 டிச2012
10:36
ஈரோடு : தக்காளி வரத்து குறைவால், கிலோ, 30 ரூபாய்க்கு மேல் உயர வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களில் விளையும் தக்காளி, அந்தந்த பகுதியின் பயன்பாட்டுக்கும், வெளி இடங்களுக்கும் அதிகமாக அனுப்பி வைக்கப்படுகிறது. தவிர, தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு தக்காளி அனுப்பி வைக்கப்படும். தற்போது, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் வறட்சியுடன், பனிப்பொழிவு அதிகம் இருப்பதால், விளைச்சல் குறைந்து உள்ளது. ஈரோடு தக்காளி வியாபாரிகள் கூறியதாவது: ஈரோடு பகுதியில் தக்காளி கிலோ, 20 ரூபாய்க்கு விற்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆந்திராவில் இருந்து, தக்காளி வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. எனவே, ஸ்டாக் வைத்து விற்பனை செய்யும் நிலையும், விலையை உயர்த்தி விற்பனை செய்யும் சூழலும் ஏற்பட்டு உள்ளது. வெளிமாநில தக்காளி வரத்து அதிகரித்தால், விலை இதே நிலைக்கு நீடிக்கும். அல்லது கிலோ தக்காளி, 30 ரூபாய்க்கு மேல் உயரும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|