பதிவு செய்த நாள்
05 டிச2012
23:55
புதுடில்லி:நடப்பு 2012-13ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,-செப்.,), இதுவரையிலுமாக, குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் (எம்.எஸ்.பி.,), 20.74 லட்சம் குவிண்டால் பருத்தி, கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என, மத்திய அரசு, தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு, காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் நாபேட் ஆகியவற்றின் மூலமாக, 90 லட்சம் பொதிகள் (ஒரு பொதி-170 கிலோ) குறைந்தபட்ச ஆதரவு விலையில், கொள்முதல் செய்யப்படும் என, மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.இதன்படி, மேற்கண்ட நிறுவனங்கள் இணைந்து, நடப்பு பருவத்தின், நவம்பர் 28ம் தேதி வரையிலுமாக, 20.74 லட்சம் குவிண்டால் பருத்தியை கொள்முதல் செய்துள்ளன.
தற்போதைய நிலையில், நடுத்தர இழை பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, குவிண்டால் ஒன்றுக்கு, 3,600 ரூபாயாகவும், நீண்ட இழை பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, குவிண்டால் ஒன்றுக்கு, 3,900 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பருத்தி ஆலோசனை கழகம், நாட்டின் ஒட்டு மொத்த பருத்தி உற்பத்தி, 3.34 கோடி பொதிகளாக இருக்குமென மதிப்பீடு செய்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|