பதிவு செய்த நாள்
05 டிச2012
23:57
மூலப் பொருட்களின் விலை உயர்வால், உருக்கு விலையை டன்னுக்கு, 1,500 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரையில் உயர்த்த, உருக்கு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.சென்ற ஆகஸ்ட் மாதத்தில், உருக்கு பொருட்களின் விலை டன்னுக்கு, 500 ரூபாய் உயர்த்தப் பட்டது. இதையடுத்து, தற்போது மீண்டும் உயர்த்தப்பட உள்ளது.கடந்த சில மாதங்களாக, உருக்கு தயாரிப்பிற்கு தேவையான சிறப்பு வகை நிலக்கரி மற்றும் இரும்புத் தாது ஆகியவற்றின் விலை, டன்னுக்கு முறையே, 10 டாலர் மற்றும் 20 டாலர் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை அடுத்து, மோட்டார் வாகன துறையில் அதிகளவில் பயன்படுத்தப் படும், வெப்ப உருட்டு உருக்கு தகடுகளின் விலை, ஒரு டன் 34 ஆயிரம் ரூபாயாக உயரும்.
இந்நிலையில், நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், நாட்டின் உருக்கு இறக்குமதி, 42 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, 30 சதவீதம் அதிகம் என, உருக்கு ஆலைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.உருக்கு விலை உயரும் பட்சத்தில் கார் மற்றும் கன ரக வாகனங்களின் விலை உயரும்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|