பதிவு செய்த நாள்
05 டிச2012
23:59
கொச்சி:நடப்பாண்டில், நாட்டின் ஏலக்காய் ஏற்றுமதி, 2,000 டன்னாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இந்திய ஏலக்காய்க்கு, வட ஆப்ரிக்க நாடுகள், மேற்காசிய நாடுகள் போன்றவை முக்கிய சந்தைகளாக திகழ்கின்றன.
சவுதி அரேபியா:குறிப்பாக, சவுதி அரேபியா, இந்திய ஏலக்காயை அதிக அளவில் இறக்குமதி செய்து கொள்கிறது. இந்திய ஏலக்காய் விலை அதிகமாக இருப்பதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், இதன் இறக்குமதியை தவிர்த்து வருகின்றன.
சென்ற ஆண்டில், ஏலக்காய் உற்பத்தி, சாதனை அளவாக, 21,000 டன்னாக இருந்தது. இதையடுத்து, அவ்வாண்டில், 363 கோடி ரூபாய் மதிப்பிலான, 4,650 டன் ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டது.நடப்பாண்டில், தாமதமான மழைப் பொழிவு, பயிர் சேதம் போன்றவற்றால் ஏலக்காய் உற்பத்தி, 14,000 டன்னாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின், முதல் நான்கு மாத காலத்தில், நாட்டின் ஏலக்காய் ஏற்றுமதி, 485 டன்னாக குறைந்துள்ளது.
இலக்கு:உள்நாட்டில் ஏலக்காய் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், நறுமணப் பொருட்கள் வாரியம், சிறிய வகை ஏலக்காய், 3,000 டன், பெரிய வகை ஏலக்காய், 1,000 டன் என, மொத்தத்தில், 4,000 டன் ஏலக்காய் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|