பதிவு செய்த நாள்
10 டிச2012
00:24
மும்பை:ஆரோக்ய பராமரிப்பு துறையில், மேற்கொள்ளப்படும், தனியார் பங்கு முதலீடு, தொடர்ந்து அதிகரித்து வருவதாக, தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.உள்நாட்டில், தனியார் பங்கு முதலீட்டை ஈர்ப்பதில், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.,), ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் முன்னணியில் உள்ளன. இதையடுத்து, ஆரோக்ய பராமரிப்பு துறை உள்ளது.
நடப்பாண்டு, செப்டம்பர் மாதம் வரையிலுமாக, 30 ஒப்பந்தங்கள் வாயிலாக, ஆரோக்ய பராமரிப்பு துறையில், மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடு, 75.40 கோடி டாலராக (4,148 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இத்துறையில், சென்ற ஆண்டின், இதே காலத்தில், 26 ஒப்பந்தங்கள் வாயிலாக, 32 கோடி டாலர் (1,760 கோடி ரூபாய்) முதலீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு காலத்தில், சிங்கப்பூர் அரசுக்கு சொந்தமான சிங்கப்பூர் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், வாசன் ஹெல்த்கேர் நிறுவனத்தில், 10 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது.அட்வென்ட் இண்டர்நேஷனல் நிறுவனம், குவாலிட்டி கேர் (கேர் ஹாஸ்பிடல்) நிறுவனத்தில், 11 கோடி டாலரையும், ஒலிம்பஸ் கேப்பிடல் ஹோல்டிங்ஸ் ஆசியா நிறுவனம், டி.எம். ஹெல்த்கேர் நிறுவனத்தில், 9.80 கோடி டாலரையும் முதலீடு செய்துள்ளன.
தற்போது, இந்தியாவில், ஆரோக்ய பராமரிப்பு துறையின் சந்தை மதிப்பு, 6,500 கோடி டாலர் (3.57 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது. இது, வரும் 2017ம் ஆண்டில், 15,500 கோடி டாலராக (8.52 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|