பதிவு செய்த நாள்
10 டிச2012
00:28
ஈரோடு:கேரளாவை சேர்ந்த தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள், தமிழகத்தில் இருந்து அதிக அளவில் கொப்பரையை வாங்கத் துவங்கியுள்ளனர். இதனால், ஈரோடு அவல்பூந்துறை சந்தையில், ஒரு குவிண்டால் கொப்பரை விலையில், 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இச்சந்தைக்கு வந்த, 2,300 டன் கொப்பரை (4,600 மூட்டைகள்) அனைத்தும், விலை அதிகமுள்ள போதிலும் விற்றுத் தீர்ந்து விட்டன.முதல் ரக கொப்பரை, 4,010 ரூபாயில் இருந்து 4,545 ரூபாய் வரை விலை போனது. இரண்டாம் ரகம் 3,810 ரூபாயில் இருந்து 4,185 ரூபாய் வரை விற்பனையானது.அவல்பூந்துறையை விட, பெருந்துறை கூட்டுறவு சந்தையில், கொப்பரை விலை குறைந்து காணப்பட்டது. இங்கு, ஒரு குவிண்டால் முதல் ரக கொப்பரை, 4,400 ரூபாய்க்கும், இரண்டாம் ரக கொப்பரை, 4,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
எண்ணெய் பனை பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பிஸ்கட், சோப்பு தயாரிப்பு தொழிற்சாலைகள், இவ்வகை எண்ணெய்யை அதிக அளவில் வாங்கி வருகின்றன.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|