பதிவு செய்த நாள்
10 டிச2012
00:33
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான, எட்டு மாத காலத்தில், நாட்டின் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு, 2.88 சதவீதம் சரிவடைந்து, 36 கோடி டன்னாக குறைந்துள்ளது.இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 37 கோடி டன்னாக அதிகரித்திருந்தது என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சுணக்க நிலைநாட்டில், 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன. கணக்கீட்டு காலத்தில், ஐந்து துறைமுகங்களில் கையாண்ட சரக்கு அதிகரித்தும், ஏழு துறைமுகங்களில், கையாளப் பட்ட சரக்கு அளவு குறைந்தும் உள்ளன.சர்வதேச பொருளாதார சுணக்க நிலையால், இந்தியாவின் அயல்நாட்டு வர்த்தகம் சுணக்கம் கண்டுள்ளது. இதனால், ஒட்டு மொத்த அளவில், துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு குறைந்துள்ளதாக தெரியவந்து உள்ளது.கோல்கட்டாவில், கோல்கட்டா டாக் சிஸ்டம் மற்றும் ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் ஆகிய இரு துறைமுகங்கள் உள்ளன.
நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாத காலத்தில், இவ்விரு துறைமுகங்களிலும், கையாண்ட சரக்கின் அளவு, 15.23 சதவீதம் சரிவடைந்து, 3 கோடி டன்னிலிருந்து, 2.57 கோடி டன்னாக குறைந்துள்ளது.இவற்றுள், கோல்கட்டா டாக் சிஸ்டம் துறைமுகத்தில், கையாளப்பட்ட சரக்கின் அளவு, 7.28 சதவீதம் குறைந்து, 83.64 லட்சம் டன்னிலிருந்து, 77.55 லட்சம் டன்னாகவும், ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 18.25 சதவீதம் குறைந்து, 2.20 கோடி டன்னிலிருந்து, 1.80 கோடி டன்னாகவும் சரிவடைந்து உள்ளன.
சென்னை துறைமுகம்தமிழகத்தில், சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி(வ.உ.சிதம்பரனார்) ஆகிய மூன்று துறைமுகங்கள் உள்ளன. கணக்கீட்டு காலத்தில், சென்னை துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்கின் அளவு, 6 சதவீதம் குறைந்து, 3.78 கோடி டன்னிலிருந்து, 3.55 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.அதேசமயம், நிறுவன அளவில் செயல்படும், எண்ணூர் துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்கின் அளவு, 19.82 சதவீதம் வளர்ச்சி கண்டு, 89.79 லட்சம் டன்னிலிருந்து, 1.07 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி துறைமுகம், கையாண்ட சரக்கின் அளவு, 1.99 சதவீதம் உயர்ந்து, 1.81 கோடி டன்னிலிருந்து, 1.84 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. விசாகப்பட்டினம் :கணக்கீட்டு காலத்தில், விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 17.72 சதவீதம் குறைந்து, 4.79 கோடி டன்னிலிருந்து, 3.94 கோடி டன்னாகவும், பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 2.48 சதவீதம் சரிவடைந்து, 3.63 கோடி டன்னிலிருந்து, 3.54 கோடி டன்னாகவும் குறைந்துள்ளன.
கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 0.54 சதவீதம் உயர்ந்து, 1.32 கோடி டன்னிலிருந்து, 1.33 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.நியூ மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 12.48 சதவீதம் உயர்ந்து, 2 கோடி டன்னிலிருந்து, 2.35 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கு, 40.46 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2.38 கோடி டன்னிலிருந்து, 1.42 கோடி டன்னாக குறைந்துள்ளது.
மும்பை துறைமுகம்:மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 9.14 சதவீதம் உயர்ந்து, 3.56 கோடி டன்னிலிருந்து, 3.88 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் கையாண்ட சரக்கின் அளவு, 1.76 சதவீதம் குறைந்து, 4.36 கோடி டன்னிலிருந்து, 4.28 கோடி டன்னாக குறைந்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 14.76 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5.38 கோடி டன்னிலிருந்து, 6.17 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என, இக்கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|