பதிவு செய்த நாள்
11 டிச2012
01:14
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், திங்கட்கிழமையன்று சுணக்கமாக இருந்தது. இந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்ததால், 'சென்செக்ஸ்' சற்று சரிவுடனும், 'நிப்டி' உயர்வுடனும் முடிவடைந்தன.சீனாவில், தொழில் துறை உற்பத்தி மற்றும் சில்லரை விற்பனை உயர்ந்துள்ளதால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தை களில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
நேற்றைய வர்த்தகத்தில், நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், ரியல் எஸ்டேட், வங்கி, நுகர் பொருட்கள், ஆரோக்ய பராமரிப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 14.41 புள்ளிகள் குறைந்து, 19,409.69 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,478.01 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,362.32 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஸ்டெர்லைட், ஹிண்டால்கோ, டி.சி.எஸ்., உள்ளிட்ட 15 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், சிப்லா, டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட 15 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,'நிப்டி', 1.50 புள்ளிகள் உயர்ந்து, 5,908.90 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,919.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,362.32 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|