பதிவு செய்த நாள்
11 டிச2012
10:19
மும்பை : வாரத்தின் முதல்நாளான நேற்று(10.12.12)ஏற்றமும் இறக்கமுமாக முடிந்த இந்திய பங்குசந்தை இன்று(11.12.12) காலை சென்செக்ஸ் 194 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கி இருக்கிறது. அமெரிக்க மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம் மற்றும் அடுத்தவாரம் மத்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வட்டி விகித குறைப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி இருக்கிறது. வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 194.08 புள்ளிகள் உயர்ந்து 19,603.77 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 31.10 புள்ளிகள் உயர்ந்து 5,940 எனும் அளவிலும் காணப்பட்டது. இந்திய பங்குசந்தையை போன்றே ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஹாங்காங் மற்றும் ஜப்பான் நாட்டு பங்குசந்தைகள் உயர்வுடன் காணப்பட்டது.
இந்திய ரூபாயை பொறுத்தமட்டில் அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா உயர்ந்து ரூ.54.29 எனும் அளவில் இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|