கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.7,980 கோடிகடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.7,980 கோடி ... தங்கம் விலை குறைவு தங்கம் விலை குறைவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகளின் கடனை மீட்கும் மசோதா நிறைவேறியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2012
11:41

புதுடில்லி:வங்கிகள் வழங்கிய கடனை, மீட்கும் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், கொண்டு வரப்பட்ட கடன் மீட்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., இடதுசாரி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இருப்பினும், இம்மசோதா லோக்சபாவில், குரல் ஒட்டெடுப்பு மூலம் நிறைவேறியது.வங்கிகள் வழங்கிய கடன், நீண்ட நாட்களாக வசூலாகாமல் நிலுவையில் உள்ளது. கடன்களை மீட்கும் வகையில், கடன் பெற்ற நிறுவனங்களின் பங்குகளை, சொத்து மறுசீரமைப்பு கம்பெனிக்கு மாற்றும் வகையில், கடன் மீட்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.இதற்கான கடன் மீட்பு மசோதா, கடந்தாண்டு டிசம்பர் மாதம் லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை பரிசீலிப்பதற்காக, பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த மசோதா மீது நேற்று லோக்சபாவில் விவாதம் நடந்தது.""வங்கிகள் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் திணறும்போது, பார்லி குழுவுக்கு அனுப்பினால், இன்னும் தாமதமாகும். வங்கிகள் நலன் கருதி, இந்தாண்டு இந்த மசோதா நிறைவேறுவது அவசியமாகிறது,'' என, நிதி அமைச்சர், சிதம்பரம் எடுத்துரைத்தார். இதற்கு பாரதிய ஜனதா, இடதுசாரி போன்ற எதிர்க்கட்சிகள், தங்கள் நிலையில் இருந்து மாறாமல், நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என, கோரின. இதை மத்திய அரசு ஏற்க மறுத்தது."வங்கிகளை மீட்க வேண்டும் என்றால், "கிங்பிஷர்' போன்ற பெரிய பெரிய கம்பெனிகள் எல்லாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இருக்கின்றன. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.இதற்கு பதில் அளித்த, சிதம்பரம், ""யாருக்கும் சலுகை காட்டப்பட மாட்டாது. சட்டம் தன் கடமையை செய்யும். கடன் பெற்றவர்கள் இணைந்துள்ள சொத்துக்களை மீட்க வங்கிகள் நடவடிக்கை எடுக்கும். அவர்களுக்கு புதிதாக கடன் வழங்கப்பட மாட்டாது,'' என்று கூறினார்.இதில், திருப்தியடையாத எதிர்க்கட்சிகள், வெளிநடப்பு செய்தன. இதையடுத்து, சபையில் உள்ள உறுப்பினர்களை கொண்டு, குரல் ஓட்டெடுப்புக்கு மசோதா விடப்பட்டது. இதில் ஏகமானதாக மசோதா நிறைவேறியது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)