பதிவு செய்த நாள்
11 டிச2012
12:33
மேட்டூர்: பொதுமக்களிடம் இருந்து, பல கோடி ரூபாய் சுருட்டிய, ஈமு கோழிப் பண்ணையாளர்களை, போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளதன் எதிரொலியாக, ஈமு கோழி முட்டைகள் விலை, கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஈமு பண்ணை நடத்தி, அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து, பல ஆயிரம் கோடி ரூபாயை பண்ணையாளர்கள் வசூலித்து, மோசடி செய்தனர். மோசடியில் ஈடுபட்ட பண்ணையாளர்களை, போலீசார் கைது செய்தனர். பணத்தை இழந்தவர்களுக்கு ஈடு செய்ய, ஏமாற்றியவர்கள் சொத்து பறிமுதலும் நடந்திருக்கிறது. மாநிலம் முழுவதும், ஈமு பண்ணைகள் மூடப்பட்டன. இதனால், ஒரு ஆண்டுக்கு முன், 1,600 ரூபாய்க்கு விற்ற ஈமு முட்டை, தற்போது, வெறும்,100 ரூபாயாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, ஆண்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பண்ணையாளர் கந்தசாமி கூறியதாவது, கடந்த, 2003 முதல், 10 ஆண்டாக ஈமு பண்ணை நடத்துகிறோம். பருவத்துக்கு வந்த ஈமு கோழிகள், மூன்று நாட்களுக்கு, ஒருமுறை என, தொடர்ந்து, ஆறு மாதம் முட்டையிடும். கடந்த, 2003ல் ஒரு ஈமு முட்டையை வியாபாரிகள், 1,000 ரூபாய்க்கு வாங்கினர். கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஒரு முட்டை, 1,600 ரூபாய்க்கு விற்பனையானது. ஈமு பண்ணை வைத்து பலர், மக்கள் பணத்தை மோசடி செய்தததால், அவர்கள் நடத்திய பண்ணைகளும் மூடப்பட்டன. ஈமு முட்டை வாங்க, வியாபாரிகள் எவரும் முன்வராததால், ஒரு முட்டையை, 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஈமு கோழி இறைச்சி ஒரு கிலோ, 300 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஈமு கோழி இறைச்சி கொழுப்பு குறைவு என்பதால், பலரும் எங்களிடம் இறைச்சி மற்றும் முட்டைகளை வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|