தங்கம் விலை குறைவுதங்கம் விலை குறைவு ... தேங்காய் கொள்முதல் விலை உயர்வு : தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி தேங்காய் கொள்முதல் விலை உயர்வு : தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி ...
ஈமு கோழி முட்டை விலை வீழ்ச்சி!!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2012
12:33

மேட்டூர்: பொதுமக்களிடம் இருந்து, பல கோடி ரூபாய் சுருட்டிய, ஈமு கோழிப் பண்ணையாளர்களை, போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளதன் எதிரொலியாக, ஈமு கோழி முட்டைகள் விலை, கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஈமு பண்ணை நடத்தி, அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து, பல ஆயிரம் கோடி ரூபாயை பண்ணையாளர்கள் வசூலித்து, மோசடி செய்தனர். மோசடியில் ஈடுபட்ட பண்ணையாளர்களை, போலீசார் கைது செய்தனர். பணத்தை இழந்தவர்களுக்கு ஈடு செய்ய, ஏமாற்றியவர்கள் சொத்து பறிமுதலும் நடந்திருக்கிறது. மாநிலம் முழுவதும், ஈமு பண்ணைகள் மூடப்பட்டன. இதனால், ஒரு ஆண்டுக்கு முன், 1,600 ரூபாய்க்கு விற்ற ஈமு முட்டை, தற்போது, வெறும்,100 ரூபாயாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, ஆண்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பண்ணையாளர் கந்தசாமி கூறியதாவது, கடந்த, 2003 முதல், 10 ஆண்டாக ஈமு பண்ணை நடத்துகிறோம். பருவத்துக்கு வந்த ஈமு கோழிகள், மூன்று நாட்களுக்கு, ஒருமுறை என, தொடர்ந்து, ஆறு மாதம் முட்டையிடும். கடந்த, 2003ல் ஒரு ஈமு முட்டையை வியாபாரிகள், 1,000 ரூபாய்க்கு வாங்கினர். கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஒரு முட்டை, 1,600 ரூபாய்க்கு விற்பனையானது. ஈமு பண்ணை வைத்து பலர், மக்கள் பணத்தை மோசடி செய்தததால், அவர்கள் நடத்திய பண்ணைகளும் மூடப்பட்டன. ஈமு முட்டை வாங்க, வியாபாரிகள் எவரும் முன்வராததால், ஒரு முட்டையை, 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஈமு கோழி இறைச்சி ஒரு கிலோ, 300 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஈமு கோழி இறைச்சி கொழுப்பு குறைவு என்பதால், பலரும் எங்களிடம் இறைச்சி மற்றும் முட்டைகளை வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)