பதிவு செய்த நாள்
11 டிச2012
13:43
கோவை : தேங்காய் சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், வரத்து குறையத் துவங்கியுள்ளதால், தேங்காய் விலை உயரத் துவங்கியுள்ளது. இதனால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தேங்காய் வரத்து, மூன்று மடங்கு குறைந்துள்ளது. இதையடுத்து, கடந்த ஓராண்டாக விலை வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த, தேங்காய் வர்த்தகம், கடந்த ஒரு வாரமாக உயரத் துவங்கியுள்ளதால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கொப்பரை உற்பத்தியாளர் சங்க தலைவர் தங்கவேல் கூறியதாவது: கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிலும், தேங்காய் உற்பத்தி குறைந்து விட்டது. இந்நிலையில், தமிழகத்திலும் கடந்த ஒரு மாதமாக, தேங்காய் வரத்து குறைந்துள்ளதால், விலை உயரத் துவங்கியுள்ளது. சீசன் கால வரத்தில், தற்போது, 30 சதவீதம் மட்டுமே உள்ளது. இதனால், தேங்காய் சார்ந்த பொருட்களின் விலை, கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில், கொப்பரை, கிலோவுக்கு, 7 ரூபாயும், தேங்காய் டன்னுக்கு, 3,000 ரூபாயும் உயர்ந்துள்ளது. வரும், மார்ச் மாதம் வரையிலும், தேங்காய் விலையில் சரிவு இருக்காது. அதனால், தேங்காய், கொப்பரை இருப்பு வைத்து விற்றால், லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|