பதிவு செய்த நாள்
11 டிச2012
17:12
மும்பை: கடைசியாக நடந்த இரண்டு நாளில் இந்திய பங்குசந்தைகள் 77 புள்ளிகள் சரிவை சந்தித்த நிலையில், யாரும் எதிர்பாராத அளவுக்கு இன்று(11.12.12) காலையில் 194 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது மும்பை பங்குசந்தை. இதனால் பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நல்ல முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்த நிலையில் மதியத்திற்கு மேல் தொடர்ந்து சரிய தொடங்கியது. கடந்த 23 மாதங்களில் இல்லாத அளவுக்கு மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 202 புள்ளிகள் எனும் அளவுக்கு உச்சத்தில் சென்றது. இருந்து நாட்டின் ஏற்றுமதி 4.17 சதவீதமாக சரிந்தது மற்றும் நல்ல லாபம் கிடைக்கிறது என்று அதிகளவிலான பங்குகள் விற்பனையானது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் சரிவில் முடிந்தன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 22.55 புள்ளிகள் சரிந்து 19,387.14 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 10.10 புள்ளிகள் சரிந்து 5,898.80 எனும் அளவிலும் முடிந்தது. மும்பை பங்குசந்தையை அளவிட உதவும் 30 பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், டாடா கன்சல்ட்டிங், எஸ்.பி.ஐ., உள்ளிட்ட 20 பங்குகளின் விலை சரிவில் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|