பதிவு செய்த நாள்
11 டிச2012
23:34
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், வங்கிகளில், மின்னணு வாயிலாக மேற்கொள்ளப்பட்ட, பண பரிமாற்றம், 17.84 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனையை விட, 30 சதவீதம் அதிகம் என, ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கிகளில், மின்னணு பண பரிமாற்றத்தின் கீழ், ஈ.சி.எஸ்., என்று சுருக்கமாக அழைக்கப்படும், மின்னணு பண பட்டுவாடா சேவை, தேசிய மின்னணு ரொக்க மாற்ற சேவை (என்.இ.எப்.டி.,) மற்றும் கிரெடிட், டெபிட் கார்டுகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனை போன்றவை இடம் பெறுகின்றன.மேற்கண்ட மின்னணு வங்கி பரிவர்த்தனை சேவைகளுள், ஓர் இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு, வங்கிகள் வாயிலாக பணம் மாற்றப்படும் (என்.இ.எப்.டி.,), சேவையின் வாயிலாக, 15.08 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஈ.சி.எஸ்., வங்கி பண பட்டுவாடா சேவை வாயிலாக, 1.69 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றைத் தொடர்ந்து, கிரெடிட் கார்டு பரிவர்த்தனை சேவை இடம்பெற்றுள்ளது.உள்நட்டில், எச்.டீ.எப்.சி., பேங்க், மிக அதிக அளவில், கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளது. இதையடுத்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இடம்பெற்றுள்ளது.இந்தியாவில், செயல்படும் அயல்நாட்டு வங்கிகளே முன், மிக அதிக அளவில், கிரெடிட் கார்டுகளை குறிப்பாக, வங்கி வாடிக்கையாளர்களாக இல்லாதவர்களுக்கும் வழங்கின. தற்போது, உள்நாட்டு வங்கிகளும், இதை பின்பற்றத் துவங்கியுள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|