தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... பச்சைமலையில் மிளகு, காபி பயிரிடுவதில் ஆர்வம் பச்சைமலையில் மிளகு, காபி பயிரிடுவதில் ஆர்வம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து முதலீட்டாளர்கள் ஓட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2012
00:44

மும்பை:சென்ற நவம்பர் மாதம், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, 1,304 கோடி ரூபாயை, முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.
சொத்து மதிப்பு:பங்குச் சந்தை ஏற்றம் கண்டு வரும் நிலையிலும், தொடர்ந்து, ஆறு மாதங்களாக, இவ்வகை திட்டங்களில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறுவது அதிகரித்து வருகிறது.அதே சமயம், சென்ற நவம்பரில், பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 3.2 சதவீதம் உயர்ந்து, 7.93 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில், 7.68 கோடி ரூபாயாக இருந்தது.
நடப்பு ஆண்டில், நவம்பர் வரையிலான, 11 மாதங்களில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, 12,702 கோடி ரூபாய் அளவிலான நிகர முதலீட்டை, முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். மே மாதம் மட்டும், 506 கோடி ரூபாய் அளவிற்கு, நிகர முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை:சென்ற செப்டம்பரில் தான், மிக அதிகமாக, அதாவது, 3,306 கோடி ரூபாய் அளவிலான முதலீடு திரும்ப பெறப்பட்டுள்ளது. பங்குச் சந்தை ஏற்றத்தை சாதகமாக பயன்படுத்தி, லாபநோக்கத்துடன் பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள், தங்களின் முதலீடுகளை திரும்ப பெற்றுள்ளனர்.இந்த வகையில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, பிப்ரவரி (2,680 கோடி ரூபாய்), மார்ச் (196 கோடி ரூபாய்), ஏப்ரல் (455 கோடி ரூபாய்), ஜூன் (186 கோடி ரூபாய்), ஜூலை (804 கோடி ரூபாய்) ஆகஸ்ட் (2,096 கோடி ரூபாய்), அக்டோபர் (1,725 கோடி ரூபாய்) முதலீடு திரும்ப பெறப்பட்டுள்ளது.
பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, எப்போது வெளியேறலாம் என்று பார்த்துக் கொண்டிருந்த நீண்ட கால முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, முதலீடுகளை திரும்ப பெற்றுள்ளதாக, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
"சென்செக்ஸ்' :சென்ற நவம்பரில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் "சென்செக்ஸ்' 4.5 சதவீதம் உயர்ந்துள் ளது. மத்திய அரசு அறிவித்த நிதி சீர்திருத்த திட்டங்களால் ஈர்க்கப் பட்ட அன்னிய நிதி நிறுவனங்கள், அதிக அளவில் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய துவங்கியுள்ளன.இதனால், பங்குச் சந்தை ஏற்றம் கண்டு வருகிறது.
கடந்த ஓராண்டில், "சென்செக்ஸ்' 25 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், இதர பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடுகள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டன.சென்ற அக்டோபரில், "லிக்யுட் பண்டு' திட்டங்களில் 18,176 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, நவம்பர் மாதத்தில், 11,414 கோடி ரூபாயாக இருந்தது.
"கில்ட் பண்டு' :இதே காலத்தில், "இன்கம் பண்டு' திட்டங்களில், மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 29,340 கோடி ரூபாயில் இருந்து, 1,555 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. மேலும், "கில்ட் பண்டு' திட்டங்களில் செய்த முதலீடு, 1,018 கோடியில் இருந்து, 1,006 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)