பதிவு செய்த நாள்
13 டிச2012
00:45
தேனி:தமிழகத்தில் மழை பெய்யாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வட மாநிலங்கள் "பம்பர் 'மகசூல் கண்டுள்ளன. இதனால், தமிழகத்தில் உணவு தானியங்களின் வரத்து அதிகரித்து, விலை குறைய வழிவகுத்துள்ளது.
ஆந்திரா: ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் நடப்பு ஆண்டில், விவசாய விளை பொருட்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. அங்கிருந்து உளுந்து, பாசிப்பயறு, துவரை, கடலை பருப்பு, கோதுமை, கடலை, அரிசி, நெல், அரிசி உட்பட அனைத்து உணவு தானியங்களும், 500க்கும் மேற்பட்ட லாரிகளில் தினமும் தமிழகம் வருகின்றன.ஆப்பிரிக்க நாடுகளில் விளைச்சல் அதிகம் உள்ளதால், அங்கிருந்தும் பயறு, பருப்பு வகைகள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
தான்சானியா நாட்டில் இருந்து பொறிகடலை அதிகளவில் இறக்குமதியாகிறது. இதனால், கிலோ, 52 ரூபாய்க்கு விற்ற, முதல்ரக பொறிகடலை, 46 ரூபாயாக குறைந்துள்ளது. கல்சர், ஐ.ஆர்., 20 ரக அரிசி கிலோ, 26 ரூபாய்க்கும், பொன்னி அரிசி, 30 ரூபாய்க்கும் மொத்த விலையில் விற்கப்படுகின்றன.
உளுந்து:தரமான முதல் ரக உளுந்து, 36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பாசிப்பயறு விலை, கிலோ, 56 ரூபாயில் இருந்து, 53 ஆக குறைந்துள்ளது. துவரை, 63ல் இருந்து, 58 ஆகவும், கடலை பருப்பு, 55ல் இருந்து, 49 ரூபாயாகவும் சரிவடைந்துள்ளது.எனினும், தமிழகத்தில் சில்லரை வியாபாரிகள், உணவு தானியங்களின் விலையை குறைக்காமல் உள்ளனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|