தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 8.2 சதவீதமாக உயர்வு தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 8.2 சதவீதமாக உயர்வு ...
பச்சைமலையில் மிளகு, காபி பயிரிடுவதில் ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2012
00:47

கெங்கவல்லி:சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, பச்ச மலையில் மிளகு மற்றும் காபி போன்ற பணப் பயிர்களின் விவசாயத்தில் ஈடுபட, மலைவாழ் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மரவள்ளி கிழங்கு :கெங்கவல்லி அருகே உள்ள, பச்சமலை மலைச்சரிவில், மரவள்ளி கிழங்கை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். முந்திரி, மா, பலா வேலி பயிராகவும், ஊடு பயிராகவும் உள்ளன.நீண்ட கால பயிரை சாகுபடி செய்து வந்த விவசாயிகள் சிலர், தெளிப்பு நீர் பாசனத்தில், குறுகிய கால பணப்பயிரான, கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை பயிர் செய்து வருகின்றனர்.மேலும், குறைந்த முதலீட்டில், அதிக வருவாய் கிடைக்கும் பணப்பயிரான மிளகு செடியை, தற்போது விவசாயிகள் அதிகளவில் பயிர் செய்யத் துவங்கி உள்ளனர்.
இதன்படி, பெரியபக்களம், புனவரை ஆகிய இடங்களில், உள்ள கல்லாங்குத்து பகுதியில், இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மிளகு செடியை பயிர் செய்துள்ளனர்.பயிர் செய்த மூன்று ஆண்டுகளில், அக்டோபர் மாதம், காய் பிடிக்க துவங்கி, பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அறுவடைக்கு தயாராகிறது. தற்போது, செடிக்கு, தலா நான்கு கிலோ முதல், ஐந்து கிலோ வரை, மிளகு கிடைக்கிறது.
ஐந்து ஆண்டுகள் வளர்ந்த செடியில், ஐந்து கிலோ முதல், 10 கிலோ வரை மிளகு கிடைக்கிறது. இங்கு அறுவடை செய்யப்படும், மிளகு அதிகம் காரம் கொண்டவை என்பதால், கிலோ, 375 முதல், 400 ரூபாய் வரை, விலை போகின்றன.மேலும், விவசாய தோட்டத்தில் ஊடு பயிராக காபிக்கொட்டையும் பயிர் செய்யப்படுகிறது.
சில்வர் ஓக்: புனவரையை சேர்ந்த விவசாயி லட்சுமணன் கூறியதாவது:என் விவசாய தோட்டத்தில் சில்வர் ஓக் மரத்தின் கீழ், மிளகு செடி வளர்த்து வருகிறேன். மூன்று ஆண்டுகளில், காய் பிடிக்க துவங்கியதால், நான்கு முதல், ஐந்து கிலோ மிளகு கிடைக்கிறது.மிளகு பயிர் செய்ய அனைத்து மலைவாழ் விவசாயிகளையும் அரசு ஊக்குவிக்க முன்வரவேண்டும். காபி செடியும் ஊடுபயிராக பயிர் செய்ய ஆரம்பித்துள்ளோம். நாளடைவில் ஏற்காடு, ஊட்டிக்கு இணையாக பச்சமலை விளங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)