அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 90.42 கோடிஅலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 90.42 கோடி ... வீடு, கோவில்களில் உள்ள தங்கத்தை கடனாக பெற்றால் இறக்குமதி குறையும் வீடு, கோவில்களில் உள்ள தங்கத்தை கடனாக பெற்றால் இறக்குமதி குறையும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி கணக்கு துவங்க பரிந்துரை தேவையில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2012
00:30

சென்னை:வங்கிகளில், யாருடைய பரிந்துரையும் இல்லாமல், ஒருவர் சேமிப்பு கணக்கை துவக்கலாம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது, ஒரு வங்கியில் கணக்கை துவக்க, அவ்வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் பரிந்துரை தேவைப்படுகிறது.இதனால், குறிப்பிட்ட வங்கி கிளையில் ஒருவர் சேமிப்பு கணக்கை துவக்க விரும்பினாலும், பரிந்துரைக்க யாரும் முன்வராதபட்சத்தில் அவரால் கணக்கை துவக்க முடியாத நிலை உள்ளது. மத்திய அரசு, பயனாளிகளுக்கு நேரடியாக ரொக்க மானியம் வழங்கும் திட்டத்தை, வரும் ஜனவரியில், 51 மாவட்டங்களில் அறிமுகப்படுத்த உள்ளது. 'ஆதார்' அட்டை அடிப்படையிலான இத்திட்டத்தில், பயனாளியின் வங்கி கணக்கில், மானியம் வரவு வைக்கப்படும்.அதுபோன்று, சமையல் எரிவாயு உருளைக்காக விண்ணப்பம் செய்வோரிடமும், வங்கி கணக்கு எண் விவரம் கேட்கப்படுகிறது.இத்தகைய தேவைகளுக்காக, வங்கி கணக்கு துவக்குவதை ரிசர்வ் வங்கி சுலபமாக்கியுள்ளது.
மேலும், தற்போது, வங்கி கணக்கை துவக்க, ஓட்டுனர் உரிமம், வருமான வரி கணக்கு எண் ('பான்' அட்டை) உள்ளிட்ட ஏதாவது ஓர் அடையாள அட்டையும், வசிப்பிட சான்றுக்கு (குடும்ப அட்டை) மற்றொரு ஆவணமும் கேட்கப்படுகிறது.இந்த நடைமுறையையும் ரிசர்வ் வங்கி தற்போது சுலபமாக்கி உள்ளது. இனி, ஓட்டுனர் உரிம அடையாள அட்டையில் உள்ள முகவரியும், வசிப்பிட முகவரியும் ஒன்றாக இருந்தால், அதுவே வங்கி கணக்கு துவங்க போதுமானது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி சேமிப்பு கணக்கை துவக்குவதற்கான விண்ணப்பத்தில், அடையாள அட்டையில் இல்லாத முகவரியை, வசிப்பிடமாக குறிப்பிட்டால் மட்டுமே, அதற்கான மற்றொரு சான்றை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், இனி பொதுமக்கள் சுலபமாக வங்கிகளில் சேமிப்பு கணக்கை துவங்க முடியும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)