பதிவு செய்த நாள்
14 டிச2012
00:33
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்க மத்திய வங்கி, அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவிக்க இருப்பதாக, செய்தி வெளியானது. இதையடுத்து, இதர ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சற்று நன்கு இருந்தது.
அதேசமயம், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மிகவும் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில், நுகர்வோர் சாதனங்கள், ரியல் எஸ்டேட், நுகர்பொருட்கள், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 126 புள்ளிகள் சரிவடைந்து, 19,229.26 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 19,421.72 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,196.75 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 23 நிறுவன பங்குகளின் விலை, சரிவடைந்தும், ஏழு நிறுவன பங்குகளின் விலை, உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 36.50 புள்ளிகள் குறைந்து, 5,851.50 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,907.45 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,841.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|