தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ... "பேண்டேஜ்' உற்பத்திக்கு டீசல் வழங்கும் நிறுவனங்கள் "பேண்டேஜ்' உற்பத்திக்கு டீசல் வழங்கும் நிறுவனங்கள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
எக்ஸ்யுவி 500 காருக்கு மொபைல் போன் தொழில்நுட்ப வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2012
16:50

வெளிநாடுகளில் ஓடும் கார்களுக்கு, மொபைல் போன் தொழில்நுட்ப வசதி உண்டு. காரின் பல முக்கிய அம்சங்களை, மொபைல் போன் மூலம் பார்க்க முடியும். அந்த வகையில், மஹிந்திரா கார் நிறுவனம், சில மாதங்களுக்கு முன், எக்ஸ்யுவி 500 காருக்கு, மொபைல் போன் தொழில்நுட்ப வசதியான, "டெல் டேல் ஆப்' என்ற வசதியை அளித்தது. காரின் எரிபொருள் திறன், காரின் கன்சோல் பகுதியில் உள்ள தகவல்களை, மொபைல் போனில் பார்க்கலாம். இந்த வசதி, ஆன்டிராய்டு பிளாட்பார்ம் மற்றும் ஐஓஎஸ் பிளாட்பார்ம் என இரண்டு வசதிகளிலும் இயங்க கூடியது. இதற்கு அடுத்தபடியாக,ஆன்டிராய்டு மொபைல் போன் மூலம் இயங்க கூடிய, எக்ஸ்யுவி 500 காருக்கான, " புளூசென்ஸ் ஆன்டிராய்டு மொபைல் ஆப்' என்ற புதிய தொழில்நுட்ப வசதியை, மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி, ஆன்டிராய்டு பிளாட்பார்மில் மட்டுமே இயங்க கூடியது. இந்த வசதி மூலம், கார் டயரின் காற்று அழுத்தம், எரிபொருள் நிலவரம், தட்பவெப்பநிலை கட்டுப்பாடு தகவல்களை, மொபைல் போன் மூலம் பார்க்கலாம். இதுதவிர, காரில் பொருத்தப்பட்டுள்ள மியூஸிக் சிஸ்டத்தை, இயக்கும், ரிமோட் போல, மொபைல் போனை பயன்படுத்த முடியும். இதுதவிர, காரின் சர்வீஸ் நிலவரம், அடுத்த சர்வீஸ் எப்போது? என்ற தகவல்களையும் பார்க்க முடியும். இந்த தொழில்நுட்ப வசதியை, "மஹிந்திரா எக்ஸ்யுவி 500' இணைய தளத்தில் இருந்து, இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தொழில்நுட்ப வசதி, எக்ஸ்யுவி 500 காரின் டபிள்யூ8 வேரியன்ட் காரில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)