பதிவு செய்த நாள்
14 டிச2012
16:50
வெளிநாடுகளில் ஓடும் கார்களுக்கு, மொபைல் போன் தொழில்நுட்ப வசதி உண்டு. காரின் பல முக்கிய அம்சங்களை, மொபைல் போன் மூலம் பார்க்க முடியும். அந்த வகையில், மஹிந்திரா கார் நிறுவனம், சில மாதங்களுக்கு முன், எக்ஸ்யுவி 500 காருக்கு, மொபைல் போன் தொழில்நுட்ப வசதியான, "டெல் டேல் ஆப்' என்ற வசதியை அளித்தது. காரின் எரிபொருள் திறன், காரின் கன்சோல் பகுதியில் உள்ள தகவல்களை, மொபைல் போனில் பார்க்கலாம். இந்த வசதி, ஆன்டிராய்டு பிளாட்பார்ம் மற்றும் ஐஓஎஸ் பிளாட்பார்ம் என இரண்டு வசதிகளிலும் இயங்க கூடியது. இதற்கு அடுத்தபடியாக,ஆன்டிராய்டு மொபைல் போன் மூலம் இயங்க கூடிய, எக்ஸ்யுவி 500 காருக்கான, " புளூசென்ஸ் ஆன்டிராய்டு மொபைல் ஆப்' என்ற புதிய தொழில்நுட்ப வசதியை, மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி, ஆன்டிராய்டு பிளாட்பார்மில் மட்டுமே இயங்க கூடியது. இந்த வசதி மூலம், கார் டயரின் காற்று அழுத்தம், எரிபொருள் நிலவரம், தட்பவெப்பநிலை கட்டுப்பாடு தகவல்களை, மொபைல் போன் மூலம் பார்க்கலாம். இதுதவிர, காரில் பொருத்தப்பட்டுள்ள மியூஸிக் சிஸ்டத்தை, இயக்கும், ரிமோட் போல, மொபைல் போனை பயன்படுத்த முடியும். இதுதவிர, காரின் சர்வீஸ் நிலவரம், அடுத்த சர்வீஸ் எப்போது? என்ற தகவல்களையும் பார்க்க முடியும். இந்த தொழில்நுட்ப வசதியை, "மஹிந்திரா எக்ஸ்யுவி 500' இணைய தளத்தில் இருந்து, இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தொழில்நுட்ப வசதி, எக்ஸ்யுவி 500 காரின் டபிள்யூ8 வேரியன்ட் காரில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|