பதிவு செய்த நாள்
14 டிச2012
23:57
ராஜபாளையம்:மின்தடையை சமாளிக்க, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சிறுவிசைத்தறி கூடங்களுக்கு, ஏற்றுமதி நிறுவனங்களே டீசலை வழங்கி, பேண்டேஜ் துணி உற்பத்திக்கு துணை புரிகின்றன. இதன் மூலம் இவை, வெளிநாடுகளுக்கு, பாதிப்பின்றி ஏற்றுமதியாகின்றன.சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கர பாண்டிய புரம் பகுதிகளில், சிறுவிசைத்தறி கூடங்கள் அதிகம் உள்ளன. மின் தடையால் பேண்டேஜ் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
இங்கு உற்பத்தியாகும் பேண்டேஜ் துணிகளை, பெரிய நிறுவனங்கள் வாங்கி, ஜெர்மன், அமெரிக்கா, தென் ஆப் பிரிக்கா, இங்கிலாந்து, சிலி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தன.மின்தடையால் உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, ஆர்டர் படி, வெளிநாடுகளுக்கு பேண்டேஜ் துணி அனுப்புவதில், ஏற்றுமதி நிறுவனங் களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவானது.
இதை தொடர்ந்து, சிறு விசைத்தறி கூடங்களை ஜெனரேட்டர் மூலம் இயக்கத் தேவையான டீசலை, ஏற்றுமதி நிறு வனங்களே வழங்கத் துவங்கியுள்ளன. இதனால், தற்போது உற்பத்தி பாதிக்காமல்,ஏற்றுமதியும் தொடர்கிறது. மருத் துவ துணி உற்பத்தியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன், "நிறுவனங்கள் டீசல் வழங்குவதால், சில பிரச் னைகள் ஏற்படுகின்றன. எனினும், வாங்கிய ஆர்டரை முடித்துக் கொடுக்கும் குறிக்கோளுடன் செயல்படு கிறோம்' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|