பதிவு செய்த நாள்
14 டிச2012
23:58
புதுடில்லி:சென்ற நிதியாண்டில், கிரெடிட் கார்டு தொடர்பான புகார்களுக்கு ஆளான வங்கிகளில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடத்தில் உள்ளது.அபராதம் கட்டத் தவறுதல், கால தாமத கட்டணம், விண்ணப்பிக்காதவர்களுக்கும் கிரெடிட் கார்டு, தொலைபேசியில் தொல்லை கொடுப்பது போன்ற புகார்கள், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் மீது உள்ளன.
இதன்படி, சென்ற 2011-12ம் நிதியாண்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மீது 5,198 புகார்கள் உள்ளன. அடுத்த இடங்களில், ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க் (1,211), எச்.டீ.எப்.சி. பேங்க் (1,153) ஆகியவை உள்ளன.ஒட்டுமொத்த அளவில், ரிசர்வ் வங்கியிடம் கிரெடிட் கார்டு குறித்து, 14,237 புகார்கள் குவிந்துள்ளன. இவை, 2010-11ம் ஆண்டு, 17,116 ஆகவும், 2009-10ம் ஆண்டு, 18,810 ஆகவும் இருந்தன. ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருவதை அடுத்து, கிரெடிட் கார்டு குறித்த புகார்கள் ஆண்டுக்காண்டு குறைந்து வருகின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|