பதிவு செய்த நாள்
17 டிச2012
00:16
அலங்காநல்லூர்:மதுரையில் வெல்லம் விலை சரிவடைந்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல், உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, சமயநல்லூர், தேனூர் பகுதிகளில், நவம்பர், டிசம்பரில், வெல்லம், அச்சு வெல்லம் தயாரிக்கப்படுகிறது.
சிங்கப்பூர்:இதற்காக பொள்ளாச்சி, உடுமலைபேட்டையில் இருந்து வெல்லம் காய்ச்சுவோர் வரவழைக்கப்பட்டு, ஒப்பந்த அடிப்படையில் பணி செய்கின்றனர்."மதுரை வெல்லம்' சுவையாக இருப்பதால், இதற்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கிராக்கி அதிகம். இந்நிலையில், வெல்லம் விலை குறைந்துள்ளதால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயி அய்யனார் கூறியதாவது:மழையின்றி விவசாயம் பொய்த்தது. கிணற்று பாசனம் மூலம் கரும்பு சாகுபடி ஓரளவுக்கு நடந்தது. இந்த ஆண்டு, வெல்லம் உற்பத்திச் செலவு இரட்டிப்பாக உயர்ந்து விட்டது.ஆனால், வெல்லம் விலை, இறங்கு முகத்திலேயே உள்ளது. கடந்த 2011ல், 10 கிலோ அச்சு வெல்லம், 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது நடப்பாண்டு, 250 ரூபாயாக குறைந்து விட்டது. வழக்கமாக, பொங்கலை முன்னிட்டு விலை ஏறும். ஆனால், தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது.
விலை நிர்ணயம்:விவசாயி அழகர் கூறியதாவது:கடந்த ஆண்டு, ஐந்து ஏக்கரில் கரும்பு பயிரிட்டேன். மழை இல்லாததால், தற்போது ஒரு ஏக்கரில் கரும்பு பயிரிட்டேன். சொந்தமாக வெல்லம் தயாரிக்கிறேன். வியாபாரிகள் விலையை குறைப்பதால், உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. விலையை, அரசு நிர்ணயித்தால், நஷ்டத்தில் இருந்து தப்ப முடியும்.பொங்கலை முன்னிட்டு, இங்கு தயாரிக்கப்படும் வெல்லம், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிகளவில் அனுப்பப்படுகிறது. விலை குறைந்துள்ள நிலையில், செலவு இரட்டிப்பாக உள்ளதால், ஏற்றுமதி செய்ய, வியாபாரிகள் தயங்குகின்றனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|