மீன் விலை "கிடுகிடு'மீன் விலை "கிடுகிடு' ... பனி காலம் துவங்கியதால் மல்லிகை விலை விர்... பனி காலம் துவங்கியதால் மல்லிகை விலை விர்... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
உற்பத்தி செலவு உயர்வால் கசக்குது வெல்லம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2012
00:16

அலங்காநல்லூர்:மதுரையில் வெல்லம் விலை சரிவடைந்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல், உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, சமயநல்லூர், தேனூர் பகுதிகளில், நவம்பர், டிசம்பரில், வெல்லம், அச்சு வெல்லம் தயாரிக்கப்படுகிறது.
சிங்கப்பூர்:இதற்காக பொள்ளாச்சி, உடுமலைபேட்டையில் இருந்து வெல்லம் காய்ச்சுவோர் வரவழைக்கப்பட்டு, ஒப்பந்த அடிப்படையில் பணி செய்கின்றனர்."மதுரை வெல்லம்' சுவையாக இருப்பதால், இதற்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கிராக்கி அதிகம். இந்நிலையில், வெல்லம் விலை குறைந்துள்ளதால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயி அய்யனார் கூறியதாவது:மழையின்றி விவசாயம் பொய்த்தது. கிணற்று பாசனம் மூலம் கரும்பு சாகுபடி ஓரளவுக்கு நடந்தது. இந்த ஆண்டு, வெல்லம் உற்பத்திச் செலவு இரட்டிப்பாக உயர்ந்து விட்டது.ஆனால், வெல்லம் விலை, இறங்கு முகத்திலேயே உள்ளது. கடந்த 2011ல், 10 கிலோ அச்சு வெல்லம், 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது நடப்பாண்டு, 250 ரூபாயாக குறைந்து விட்டது. வழக்கமாக, பொங்கலை முன்னிட்டு விலை ஏறும். ஆனால், தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது.
விலை நிர்ணயம்:விவசாயி அழகர் கூறியதாவது:கடந்த ஆண்டு, ஐந்து ஏக்கரில் கரும்பு பயிரிட்டேன். மழை இல்லாததால், தற்போது ஒரு ஏக்கரில் கரும்பு பயிரிட்டேன். சொந்தமாக வெல்லம் தயாரிக்கிறேன். வியாபாரிகள் விலையை குறைப்பதால், உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. விலையை, அரசு நிர்ணயித்தால், நஷ்டத்தில் இருந்து தப்ப முடியும்.பொங்கலை முன்னிட்டு, இங்கு தயாரிக்கப்படும் வெல்லம், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிகளவில் அனுப்பப்படுகிறது. விலை குறைந்துள்ள நிலையில், செலவு இரட்டிப்பாக உள்ளதால், ஏற்றுமதி செய்ய, வியாபாரிகள் தயங்குகின்றனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)