பதிவு செய்த நாள்
17 டிச2012
00:17
புதுடில்லி:இந்தியாவில், அலைபேசி வாயிலாக, வங்கிச் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 1.72 கோடி என்ற அளவில் உள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பார்லிமென்டில் தெரிவித்தார்.உள்நாட்டில், அலைபேசி வாயிலாக, வங்கிச் சேவை வழங்குவதில், தனியார் துறையை சேர்ந்த எச்.டீ.எப்.சி. பேங்க் முதலிடத்தில் உள்ளது. இவ்வங்கியில் கணக்கு வைத்துள்ள, 88.88 லட்சம் வாடிக்கையாளர்கள், அலைபேசி வாயிலாக வங்கி சேவையை பயன்படுத்துகின்றனர்.
அலைபேசி வாயிலான வங்கி சேவையில், 50.92 லட்சம் வாடிக்கையாளர்களுடன், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.இதையடுத்து, கார்ப்பரேஷன் பேங்க் (6.75 லட்சம் பேர்), ஐ.சி.ஐ.சி.ஐ.,பேங்க் (5.49 லட்சம் பேர்), ஆக்சிஸ் பேங்க் (3.51 லட்சம் பேர்), பேங்க் ஆப் பரோடா (3.17 லட்சம் பேர்) ஆகிய வங்கிகள் உள்ளன.அலைபேசி வாயிலாக, தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, வங்கிச் சேவைகளை பெறும் வசதி உள்ளதால், அனைத்து தரப்பினரிடையே இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|