பதிவு செய்த நாள்
17 டிச2012
00:18
சேலம்:தமிழகத்தில் எள்ளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதன் விலை, ஒரே வாரத்தில் குவிண்டாலுக்கு, 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, நல்லெண்ணெய் விலை, லிட்டருக்கு, 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.ஈரோடு:தமிழகத்தில், எள் அதிக அளவில் விளையும், விருதுநகர், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில், எதிர்பார்த்த அளவு எள் விளைச்சல் இல்லை.
அதே நேரத்தில், ஆந்திர மாநிலம் கடப்பா, ராஜம்பேட், ஜம்மல்மடுகு, மேற்கு வங்கத்தின் கோல்கட்டா ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த எள் வரத்து முற்றிலும் நின்று விட்டது.சேலம், ஈரோடு, விருதுநகர், மதுரை மண்டிகளில், எள் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை ஒரு குவிண்டால் எள், 5,900 ரூபாய் முதல், 6,200 ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்டது.தற்போது எள்ளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதன் விலை, குவிண்டாலுக்கு, 1,800 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது.
ஈரோடு, சேலம் மண்டிகளில் ஒரு குவிண்டால் எள், 8,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கடந்த ஒரே வாரத்தில், எள் விலையில் குவிண்டாலுக்கு, 2,000 ரூபாய் வரை உயர்ந்துஉள்ளது. தட்டுப்பாடு தொடர்வதால், எள் விலையில் மேலும் உயர்வு ஏற்படும் என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.மின் தட்டுப்பாடு:எள் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் தட்டுப்பாடு காரணமாக, எண்ணெய் ஆலைகள் உற்பத்தியில் ஈடுபட முடியவில்லை.
அது மட்டுமின்றி ஜெனரேட்டரை பயன்படுத்தி எண்ணெய் உற்பத்தி மேற்கொள்ளும் பட்சத்தில், எண்ணெய் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது.கடந்த மாதம் வரையில், தமிழகத்தின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் விலை, 180 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 205 ரூபாயாக அதிகரித்துஉள்ளது.
பிரபல எண்ணெய் நிறுவனங்களின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளூரில் தயாரிக்கப்படும் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் விலை, 140 ரூபாயில் இருந்து, 160 ரூபாயாக உயர்ந்துள்ளது.தற்போது சந்தையில், ஒரு லிட்டர் நல்லெண்ணெயின் குறைந்த பட்ச விலை, 160 ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில், எண்ணெய் வரத்தும் குறைந்துஉள்ளது. இதனால், வரும் வாரங்களில் எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
சேலம் நல்லெண்ணெய் வியாபாரி குமார் கூறியதாவது:தமிழகத்தில் வரலாறு காணாத வகையில், எள்ளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. உற்பத்தி நிறுத்தம்:அதே நேரத்தில், வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த எள்ளின் வரத்து முற்றிலும் நின்று விட்டதால், சந்தையில் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, ஆலைகளுக்கு பிரச்னையை கொடுத்து வருவதால், எண்ணெய் ஆலைகள், நல்லெண்ணெய் உற்பத்தியை நிறுத்தி விட்டன. இதன் காரணமாக, விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|