பதிவு செய்த நாள்
17 டிச2012
00:19
திண்டுக்கல்:பனி காலம் துவங்கியதையடுத்து, மல்லிகை விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை விலை, 450 ரூபாயாக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில், மதுரை மல்லி விளைச்சல் அதிகளவில் உள்ளது. இங்கிருந்து தினமும் சிங்கப்பூருக்கு மல்லிகை ஏற்றுமதி செய்யப்படுகிறது.கோடைகாலத்தைப் போல் பனி காலத்தில், மல்லிகை பூக்கள் அதிகம் பூப்பதில்லை. இதனால் சந்தையில் பூக்கள் வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது.
நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயிகள் ஆண்டு முழுவதும் மல்லிகை பூ அறுவடை செய்கின்றனர். இதற்காக, "பாலி ஹவுஸ்' (பசுமை குடில்) அமைத்து, மல்லிகை பயிரிட்டு, சீரான தட்ப வெப்ப நிலையை நிலவச் செய்து, மல்லிகை பயிரிடுகின்றனர்.கடந்த வாரம் வரை கிலோ 300 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப் பூ, 450 ரூபாயாக உயர்ந்துள்ளது. வரும் வாரங்களில் மல்லிகை பூ வரத்து வெகுவாக குறையும் என்பதால், விலை மேலும் உயரும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|