பனி காலம் துவங்கியதால் மல்லிகை விலை விர்...பனி காலம் துவங்கியதால் மல்லிகை விலை விர்... ... குறைந்தது தேங்காய் விளைச்சல்: கொப்பரை விலை கிடு கிடு... குறைந்தது தேங்காய் விளைச்சல்: கொப்பரை விலை கிடு கிடு... ...
சம்பா பயிரை பாதுகாக்க புதிய உத்திகள் விவசாயிகளுக்கு உதவ விழிப்புணர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2012
00:20

திருவாரூர்;விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்துவதுடன் சம்பா பயிர்களை பாதுகாக்க, புதிய உத்திகளை கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி, ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
இது குறித்து கலெக்டர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: காவிரி பாசனப்பகுதிகளில் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கவும், உற்பத்தியை பெருக்கவும் நடப்பாண்டில் சம்பா சிறப்பு தொகுப்புத்திட்டத்தைமுதல்வர் அறிமுகப்படுத்தி செயல்படுத்தியுள்ளார். விவசாயிகள் நலன் கருதி மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
டீசல் மானியம் ஏக்கருக்கு 600 ரூபாயும், தண்ணீரைப் பாய்ச்ச வசதியாக, 180 மீட்டர் நீளமுள்ள எச்.டி.பி.இ., பைப்புகள் வாங்க 100 சதவீதம் மானியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.காயும் நிலையில் உள்ள பயிர்களை பாதுகாக்க பல்வகை நீர்த்தெளிப்பான்கள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் தேவையான விவசாயிகளுக்கு வழங்கப்படும். ஏழு முதல் 10 நாட்கள் வரை வறட்சியை தாங்கக்கூடிய "மியூரிடேட் ஆப் பொட்டாஷ்' உரம் மற்றும் "பின்க் பிக்மென்ட் பேக்கல்டேட்டிவ் மெத்திலோட்ரோப்' ஆகியவை தேவைக்கேற்ப பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மீது, வேளாண் அறிவியல் நிலையம் வாயிலாக தெளிக்கப்படும்.
விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்துவதுடன், தண்ணீர் தேவையை குறைக்கும் வகையில் சிறிய நடமாடும் தெளிப்பான்கள் தேவையான விவசாயிகளுக்கு வழங்கப்படும். சம்பா பயிரை காப்பாற்ற புதிய உத்திகளை கூறும் வகையில் கிராம் தோறும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)