பதிவு செய்த நாள்
17 டிச2012
00:20
திருவாரூர்;விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்துவதுடன் சம்பா பயிர்களை பாதுகாக்க, புதிய உத்திகளை கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி, ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
இது குறித்து கலெக்டர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: காவிரி பாசனப்பகுதிகளில் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கவும், உற்பத்தியை பெருக்கவும் நடப்பாண்டில் சம்பா சிறப்பு தொகுப்புத்திட்டத்தைமுதல்வர் அறிமுகப்படுத்தி செயல்படுத்தியுள்ளார். விவசாயிகள் நலன் கருதி மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
டீசல் மானியம் ஏக்கருக்கு 600 ரூபாயும், தண்ணீரைப் பாய்ச்ச வசதியாக, 180 மீட்டர் நீளமுள்ள எச்.டி.பி.இ., பைப்புகள் வாங்க 100 சதவீதம் மானியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.காயும் நிலையில் உள்ள பயிர்களை பாதுகாக்க பல்வகை நீர்த்தெளிப்பான்கள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் தேவையான விவசாயிகளுக்கு வழங்கப்படும். ஏழு முதல் 10 நாட்கள் வரை வறட்சியை தாங்கக்கூடிய "மியூரிடேட் ஆப் பொட்டாஷ்' உரம் மற்றும் "பின்க் பிக்மென்ட் பேக்கல்டேட்டிவ் மெத்திலோட்ரோப்' ஆகியவை தேவைக்கேற்ப பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மீது, வேளாண் அறிவியல் நிலையம் வாயிலாக தெளிக்கப்படும்.
விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்துவதுடன், தண்ணீர் தேவையை குறைக்கும் வகையில் சிறிய நடமாடும் தெளிப்பான்கள் தேவையான விவசாயிகளுக்கு வழங்கப்படும். சம்பா பயிரை காப்பாற்ற புதிய உத்திகளை கூறும் வகையில் கிராம் தோறும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|