பதிவு செய்த நாள்
17 டிச2012
00:23
நாமக்கல்:நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலை, 23 காசுகள் உயர்த்தி, 310 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை விலை, ஒரே நாளில், 23 காசு ஏற்றம் கண்டிருப்பது, பண்ணையாளர்கள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் நலச் சங்கத் தலைவர் நல்லதம்பி கூறியதாவது:ஒரு மாத காலமாக, முட்டை விலையில், பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. 280 காசு வீதம் விற்பனை செய்யப்பட்ட சமயத்தில், முட்டை உற்பத்தி, செலவுக்கு கூட வருமானம் இல்லாத நிலை இருந்தது.தற்போது, வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் முட்டைக்கு தேவை அதிகரித்துள்ளது. இதனால், முட்டை நுகர்வு அதிகரித்து இதன், விலையும் உயர்ந்துள்ளது.இவ்வாறு, நல்லதம்பி கூறினார்.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் (காசுகளில்):சென்னை, 292, பெங்களூரு, 295, மைசூரு, 287, ஐதராபாத், 290, மும்பை, 322, விஜயவாடா, 287, கோல்கட்டா, 335, பார்வாலா, 336, புதுடில்லி, 348.இவ்வாறு, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.மேலும், முட்டைக் கோழி விலை, கிலோவுக்கு நான்கு ரூபாய் உயர்த்தி, 40 ரூபாயாகவும், கறிக்கோழி விலை, கிலோவுக்கு இரண்டு ரூபாய் உயர்த்தி, 60 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|